ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் கடந்த வாரம் நடைபெற்ற ஆடை, அலங்காரக் கண்காட்சி ஒன்றில் கண்ணாடியால் செய்யப்பட்ட ‘சூட்’ ஒன்றை இந்த ஆடவர் அணிந்திருந்தார்.
2018ல் 1,300க்கும் மேற்பட்ட பொருள்களின் இறக்குமதிக்கு ஈரான் தடை விதித்திருந்தது. உள்நாட்டுத் தயாரிப்பாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
தடை செய்யப்பட்டிருந்த பொருள்களில் துணிமணிகள், சர்க்கரை, கார்கள், முக ஒப்பனைப் பொருள்கள், வீட்டு உபயோகச் சாதனங்கள், தோல் பொருள்கள், அறைகலன்கள், சுகாதாரப் பராமரிப்புப் பொருள்கள், சிலவகை இயந்திரங்கள் உள்ளிட்டவை அடங்கும். அவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
இறக்குமதித் தடையால், ஈரானில் உள்நாட்டுத் தயாரிப்பாளர்களுக்கு வியாபாரம் அமோகமாக இருந்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கும் ஈராக், துருக்கி, ஆர்மீனியா போன்ற அண்டை நாடுகளுக்கும் துணிமணிகளை ஈரான் ஏற்றுமதி செய்கிறது.