ஹர்டோம்: சூடானில் இடைக்கால அரசாங்கத்தை கலைத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்துள்ள ராணுவம், அவசரகால நிலையை அறிவித்து உள்ளது.
இதனால் நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ராணுவத்துக்கு எதிராக அர சாங்க ஆதரவாளர்கள் சாலைகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டனர்.
சாலைகளில் டயர்களை அடுக்கி வைத்து அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் தலை நகரம் கரும்புகையில் மூழ்கியது.
நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால் கலவர பூமியானது.
அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய கூட்டு மன்றத்துக்கு தலைமை வகித்து வந்த ஜெனரல் அப்டெல் ஃபட்டா புர்ஹான், அரசியல்வாதிகளின் சண்டையே ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணம் என்றார்.
நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்த ஒமர் அல்-பஷிர் அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூக்கி எறியப்பட்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து ராணுவத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இைடயே மோதல் நீடித்து வருகிறது.
பிரதமர் அப்தல்லாஹ ஹம்டோகும் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுப்புகளை உடைத்துக் கொண்டு ராணுவத் தலைமையகத்துக்கு அருகிலுள்ள பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதை சில காணொளிக்காட்சிகள் காட்டின.
ஃபேஸ்புக்கில் வெளியான தொடர்பு அமைச்சின் அறிக்கையில் கூட்டு ராணுவப்படை பலரை தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகவும் அடையாளம் தெரியாத இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது.
ஆட்சிக்கவிழ்ப்புக்கு பிரதமர் ஹம்டோகின் ஆதரவு கோரப் பட்டது. அதற்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அமைதியான முறையில் போராடு மாறு தமது ஆதரவாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கிடையே சூடானுக்கான இங்கிலாந்து தூதர், ஆட்சிக் கவிழ்ப்பு, இடைக்கால அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யப்பட்ட துரோகம் என்று டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை சூடான் நிலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ளன.
சூடான் முழுவதும் இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பெருநகரங்களில் சாலை யெங்கும் ராணுவ வீரர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர்.
தலைநகரில் உள்ள அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டு அனைத்துலக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
2019ல் பல மாத ஆர்ப்பாட்டங் களுக்குப் பிறகு அதிபர் பஷிர் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு ராணுவமும் இடைக்கால அதிகாரி களும் இணைந்து ஆட்சியை நடத்தினர்.