ஜகார்த்தா: இந்தோனீசியாவில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 70 விழுக்காட்டை தாண்டியிருப்பதால் நாட்டின் பல பகுதிகள் வெளிநாட்டுப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்று அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ கூறியுள்ளார்.
தென்கிழக்கு ஆசியா கருத்தரங்கில் நேற்று அவர் உரையாற்றினார்.
அப்போது, பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தென்கிழக்கு ஆசிய நாடுகள் தளர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். எதிர்கால சுகாதார நெருக்கடியைச் சமாளிக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்வதும் அவசியம் என்று அதிபர் ஜோகோ குறிப்பிட்டார்.
இம்மாதம் முற்பகுதியில் சீனா, நியூசிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகளுக்கு பிரபல சுற்றுலாத் தலமான பாலியின் எல்லைகள் திறக்கப்படுவதாக இந்தோனீசியா அறிவித்தது.
அதன்படி அக்டோபர் 14ஆம் ேததியிலிருந்து பாலியின் அனைத்துலக விமான நிலையம் வெளிநாட்டுப் பயணிகளுக்குத் திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை பாலித் தீவுக்குப் பெருமளவில் சுற்றுலா பயணிகள் வந்ததாகத் தெரியவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 24 மணி நேரத்தில் புதிதாக 623 பேருக்குத் தொற்று ஏற்பட்டது. இந்தோனீசிய மக்கள் தொகையில் இதுவரை 24 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.

