ஆக்லாந்து: நியூசிலாந்தில் 2வது நாளாக தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 109 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆக்லாந்தில் பதிவானவை.
ஒரு கட்டத்தில் கிருமித்தொற்று அறவே இல்லாத நாடாக நியூசிலாந்து இருந்தது.
ஆனால் அதிவேகத்தில் பரவும் தன்மைகொண்ட டெல்டா கிருமி அரசுக்கு சவாலாக இருந்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆக்லாந்து நகரம் முடக்கத்தில் வைக்கப்பட்டும் தொற்று குறைவதாக இல்லை.
ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு தென் தீவிலும் முதல் தொற்றுச் சம்பவம் பதிவானதால் அரசுக்கு மேலும் தலைவலி அதிகரித்துள்ளது. இருந்தாலும் தொற்று மேலும் பரவும் சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிருமித்தொற்று சம்பவங்களை குறைக்க முடியாததால் நாட்டில் தொற்று ஏற்படுவதை முழுமையாக ஒழிக்கும் முயற்சியை பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கைவிட்டுள்ளார்.
அதற்குப் பதிலாக கிருமித்தொற்றோடு வாழும் முறைக்கு நியூசிலாந்து மக்களை அவர் தயார்ப் படுத்தி வருகிறார்.
நியூசிலாந்து 71 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர். அவர்களில் 77 விழுக்காடு ஆக்லாந்து நகரவாசிகளும் அடங்குவர்.