கோலாலம்பூர்: ஹப் செங் நிறுவனம், தாங்கள் தயாரிக்கும் கிரீம் கிராக்கர்ஸ் பிஸ்கெட் மிகவும் பாதுகாப்பானது என்று உறுதி கூறியுள்ளது.
பிஸ்கெட் தயாரிப்பிலும் சந்தைப்படுத்துவதிலும் உள்ளூர் விதிமுறைகளைப் பின்பற்றுவதாகவும் உணவுத் தரப் பாதுகாப்பு நடை முறைகளைக் கடைப்பிடிப்பதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.
1958லிருந்து சமூகப் பொறுப்புடன் உணவுப் பொருட்களைத் தயாரித்து வருகிறோம். வாடிக்கையாளர்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஹப் செங் குறிப்பிட்டது.
ஹப் செங் தயாரிப்பு உட்பட 60 நிறுவனங்கள் தயாரிக்கும் பிஸ்கெட்டுகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருள் கலந்திருப்பதாக கடந்த அக்ேடாபர் 18ஆம் ேததி ஹாங்காங் பயனீட்டாளர் மன்றம் கூறியிருந்தது.
இதையடுத்து பிஸ்கெட் தரம் குறித்து ஆய்வு செய்யப்போவதாக மலேசிய சுகாதார அமைச்சு அறி வித்தது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பானது என்பதை ஹப் செங் மறுவுறுதிப்படுத்தியிருக்கிறது.
ஹாங்காங்கின் பயனீட்டாளர் மன்றம், சீனாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை ஆய்வு செய்ததா என்பது குறித்து தகவல் இல்லை.

