சீனாவின் பல பகுதிகளில் தலையெடுக்கிறது தொற்று

கொவிட்-19 விதிமுறையை அலட்சியப்படுத்துபவர்கள் மீது போலிஸ் கெடுபிடி

பெய்­ஜிங்: சீனா­வின் வூஹா­னில் உரு­வா­ன­தா­கக் கூறப்­படும் கொரோனா தொற்று, உல­கையே ஆட்­டிப்­ப­டைத்து வரு­கிறது. இருப்­பி­னும் எல்­லை­யைத் திறந்துவிடு­வ­தில் உலக நாடு­கள் முனைப்பு காட்டி வரு­கின்­றன.

ஆனால், சீனா மட்­டும் தொற்று நெருக்­கடி தொடங்­கி­ய­தில் இருந்து தனது அனைத்­து­லக எல்­லையை இறுக்­க­மாக மூடி­வைத்­து­விட்டு கொரோ­னாவை முற்­றி­லும் துடைத்­தொ­ழிப்­பதை இலக்­கா­கக் கொண்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் சீனா­வின் பல பகு­தி­களில் கொரோனா தொற்­று மீண்­டும் தலை­யெ­டுக்­கத் தொடங்­கி­யுள்­ளது. அதை­ய­டுத்து சீனா, தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த மக்­கள் கொவிட்-19 விதி­மு­றை­க­ளைப் பின்­பற்றி நடக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி வரு­கிறது.

இருப்­பி­னும், பெய்­ஜிங் நக­ரில் உள்ள மக்­களில் பலர் கட்­டுப்­பா­டு­களை அலட்­சி­யப்­ப­டுத்­து­வ­தால் கிரு­மிப் பர­வல் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது.

சீனா­வில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை மீறு­ப­வர்­க­ளுக்கு அந்­நாட்­டுக் காவல்­து­றையே தண்­ட­னை­க­ளைக் கொடுத்து வரு­கிறது.

தொற்­றுக் கட்­டுப்­பாட்டு விதி­முறை­களை அலட்­சி­யப்­ப­டுத்­தும் போக்கு அங்கு அதி­க­ரித்­துள்­ள­தால் நாட்­டில் உள்ள பாதி பகு­தி­களில் கொரோனா மீண்­டும் தலை­யெ­டுக்­கத் தொடங்­கி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அந்­நாட்­டின் வட­மேற்­குப் பகு­தி­யில் இயற்கை எழில் சூழ்ந்த சுற்­று­லாத் தலங்­க­ளைச் சுற்­றிப் பார்க்க ஏரா­ள­மான உள்­நாட்­டுச் சுற்­றுப் பய­ணி­கள் வருகை தந்­த­னர். அத­னை­ய­டுத்து பத்து நாட்­க­ளுக்கு முன் அங்கு 200க்கு மேற்­பட்­டோ­ருக்கு கொரோனா பாதிப்பு இருப்­பது தெரி­ய­வந்­தது. நேற்று மட்­டும் அப்­ப­கு­தி­யில் 34 தொற்­றுச் சம்பவங்கள் பதி­வா­னது. பாதிக்கப்பட்டவர்களில் 11 பேருக்கு எவ்­வி­தத் தொற்று அறி­கு­றி­யும் இல்லை என்று நேற்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். அத்­து­டன் நாட்­டின் 31 மாவட்­டங்­களில் 14ல் தொற்று பதி­வா­னது.

வட­மேற்­குப் பகு­தி­யில் காணப்­பட்ட தொற்று இப்­போது மேற்­கில் உள்ள சிச்­சு­வான் பகு­தி­யி­லும் பர­வத் தொடங்­கி­யுள்­ளது.

ரஷ்­யா­வின் எல்­லை­யில் உள்ள ஹெய்­லொங்­ஜி­யாங் வட்­டா­ரத்­தில் முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால் அங்கு வாழும் 1.58 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் வீட்­டுக்­குள் முடங்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து அங்கு குற்­றங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கொரோ­னாவை முற்­றி­லும் துடைத்­தொ­ழிக்க சீனா இலக்கு கொண்­டுள்­ளது. அவ்­வ­கை­யில், முகக்­க­வ­சம் அணி­வது, பாது­காப்பு இடை­வெளியைக் கடைப்­பி­டிப்­பது, பய­ணக் கட்­டுப்­பாடு போன்­ற­வற்றை அலட்­சி­யப்­ப­டுத்­து­ப­வர்­கள் மீது குற்­ற­வி­யல் வழக்­குப் பதிவு செய்து விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

சீனா­வின் பல பகு­தி­க­ளி­லும் மக்­கள், அர­சாங்­கத்­தின் கொரோனா விதி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டித்து வரு­கின்­ற­னர்.

ஆனால், பெய்­ஜிங்­கில் மட்­டும், தொற்­றுக்கு எதி­ரான தடை மற்­றும் கட்­டுப்­பா­டு­களை மக்­கள் புறக்­க­ணித்து வரு­வ­தால் அங்கு தொற்­றுப்­ பா­திப்பு அதி­க­ரித்து வரு­வ­தாக அதி­கா­ரி­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

தொற்­றுப் பாதிப்பு அதி­கம் உள்ள ஆபத்­தான இடங்­க­ளுக்­குச் சென்று வந்­தது பற்­றிய விவ­ரங்­களை அவர்­கள் போலி­சுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தா­த­வர்­கள், முகக்­க­வ­சம் அணிய மறுப்­ப­வர்­கள், தொற்­றுத் தட­ம­றி­த­லுக்­காக கடைத்­தொ­கு­தி­களில் ஸ்கேன் செய்ய மறுப்­ப­வர்­கள், தொற்று விதி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிக்­கு­மாறு வலி­யு­றுத்­தும் ஊழி­யர்­க­ளைத் தாக்­கி­ய­வர்­கள் என ஏரா­ள­மா­னோர் போலி­சா­ரால் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­னர். இதனை பெய்­ஜிங்­கில் போலிஸ் பேச்­சா­ளர் பான் ஸுஹோங் தெரி­வித்­தார்.

முதன்­மு­த­லில் சீனா­வின் வூஹான் மாநி­லத்­தில் உரு­வா­ன­தா­கக் கூறப்­படும் கொரோனா கிரு­மித்­தொற்று உல­கம் முழு­தும் பரவி உல­கத்­தையே முடக்கிப் போட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் சீனா கொரோ­னாவை, தனது இரும்­புக் கரம் கொண்டு கட்­டுக்­குள் கொண்­டு­வந்­தது. நாடா­ள­விய நிலை­யில் மாபெ­ரும் கொரோனா சோதனை இயக்­கத்தை நடத்தி, தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தி­யது.

இருப்­பி­னும் இப்­போது உலக நாடு­கள் தங்­கள் எல்­லை­க­ளைத் திறக்க முனைந்­துள்ள இந்­தக் கால­கட்­டத்­தி­லும் சீனா, எல்­லை­களை மூடி­வைத்­து­விட்டு, கொரோனா தொற்றைத் துடைத்­தொ­ழிக்­கும் பணியை முடுக்­கி­விட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!