உற்சாக பானங்களுடன் மெல்பர்ன் மக்கள்

உற்சாக பானங்களுடன் மெல்பர்ன் மக்கள்

2 mins read
0429f8e8-114c-47da-9962-f18968e6d408
பல மாதங்களுக்குப்பிறகு இம்மாதம்22ஆம் தேதிமேலும் கட்டுப் பாடுகள்தளர்த்தப் பட்டதால் மெல்பர்ன் நகர மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.படம்: ஏஎஃப்பி -

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஆகப்­பெ­ரிய நக­ரங்­களில் ஒன்­றான மெல்­பர்ன், கிரு­மிப் பர­வல் கார­ண­மாக கடந்த ஒன்­பது மாத­மாக முடக்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னால் மக்­கள் சுதந்­தி­ர­மாக நட­மாட முடி­ய­வில்லை.

கடை­கள், உண­வகங்­கள் அடைக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த நிைலயில் பல மாதங்­க­ளுக்­குப் பிறகு பல கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் அடைந்­து­கி­டந்த மக்­கள் உற்­சா­கத்­து­டன் கடை­க­ளுக்­கும் மது­பா­னக் கூடங்­க­ளுக்­கும் படைெய­டுத்­துள்­ள­னர். ஏறக்­கு­றைய எல்லா கடைகளி­லும் மக்­கள் வரி­சை­யில் காத்­தி­ருக்­கும் அள­வுக்கு கூட்­டம் கூடியது. மது­பா­னக் கூடங்­களில் உற்­சாக பானம் கரை­பு­ரண்டு ஓடுகிறது. ஐந்து மில்­லி­யன் மக்­கள் வசிக்­கும் அந்­ந­க­ரம், ஆறா­வது முடக்­கத்­திற்­குப் பிறகு கடந்த வாரம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டது. மெல்­பர்ன் மட்டுமல்லாமல் விக்­டோ­ரியா முழு­வ­தும் எண்­பது விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்டு உள்­ள­தால் தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் விக்­டோ­ரி­யா­வில் 1,355 புதிய சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. இது, இம்­மா­தம் பதி­வான மிகக் குறை­வான தொற்­றுச் சம்­ப­வங்­க­ளா­கும். 11 பேர் தொற்­றுக்குப் பலி­யா­கி­யுள்­ள­னர். ஆனால் தடுப்­பூசி போடா­த­தால் உடல்­நிலை மோச மாக பாதிக்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

"இதற்­கிை­டயே இரு­ப­து வயது­களில் இருப்­போர் உடனே சென்று தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளுங்­கள். அது­தான் உங்­களை தொற்­றி­லி­ருந்து பாது­காக்­கும்," என்று விக்­டோ­ரியா கொவிட்-19 தடுப்பு நட­வ­டிக்கை அதி­காரி ஜெரோ­யின் வெய்­மார் அறை­கூ­வல் விடுத்­துள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லியா முழு­வ­தை­யும் எடுத்­துக் கொண்­டால், நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் 236 பேர் புதி­தாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மூவர் மர­ண­ம­டைந்­த­னர்.

அண்டை நாடான நியூ­சி­லாந்­தில் புதி­தாக 160 பேருக்கு தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. இவர்­களில் பெரும்­பா­லா­னோர் ஆக்­லாந்து நக­ரைச் சேர்ந்­த­வர்­கள். 'டெல்டா' கிரு­மிக்கு எதி­ராக நியூ சிலாந்து போராடி வரு­கிறது.