மலாக்கா தேர்தல்: மறைமுக பிரசாரத்தில் தலைவர்கள்

மலாக்கா தேர்தல்: மறைமுக பிரசாரத்தில் தலைவர்கள்

2 mins read
2c20a784-2c2d-49fc-9473-9a2110e78cc5
அண்மையில் தேர்தல் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்ட பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள். படம்: பெர்னாமா -

மலாக்கா: சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெற இருப்­ப­தை­யொட்டி அர­சி­யல் தலை­வர்­கள் மலாக்கா மாநி­லத்­தில் மறை­முக பிர­சா­ரத்­தில் தீவி­ரம் காட்டி வரு­கின்­ற­னர். வாக்­கா­ளர்­க­ளைக் கவர நேரடி பிர­சா­ரத்­தில் இறங்க அண்­மை­யில் விதிக்­கப்­பட்ட தடை அவர்­க­ளைத் தடுக்­கிறது.

தேர்­தல் தொடர்­பான ஒன்­று­ கூ­டல்­க­ளுக்கு மலே­சியா சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தடை விதித்து கடந்த வாரம் உத்­த­ரவு ஒன்றை பிறப்­பித்திருந்­தார். இம்­மா­தம் 20ஆம் தேதி நடை­பெற இருக்­கும் தேர்­தல் தொடர்­பான விதி­மு­றை­களை தேர்­தல் ஆணை­யம் விரை­வில் வெளி­யி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

முன்­னாள் பிர­த­மர்­கள் நஜிப் ரசாக்­கும் முகை­தீன் யாசி­னும் நேற்று முன்­தி­னம் சில இடங்­க­ளுக்­குச் சென்­ற­னர். தமது வருகை தேர்­தல் தொடர்­பானது அல்ல என்று திரு நஜிப் கூறி­னார். "மலாக்­கா­வில் எனது பழைய நண்­பர்­க­ளைச் சந்­திக்க வந்­துள்­ளேன். இதனை தேர்­தல் பிர­சா­ர­மா­கக் கரு­தக்­கூ­டாது," என்று கம்­போங் ஹைலாம் மீன­வர் பட­குத்­து­றைக்கு வருகை அளித்­த­போது திரு நஜிப் கூறி­னார். முற்பகல் 11 மணி­ய­ள­வில் தமது மறை­முகப் பிர­சார நட­

வ­டிக்­கை­க­ளைத் தொடங்­கிய அவர், கிள­பாங் இர­வுச் சந்­தைக்­கும் சென்­றார். அதே­போல முகைதீன் யாசின் காலை 10 மணி முதல் இரவு 10.45 மணி வரை சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டார். மஜித் தானா­விலுள்ள உண­வங்­காடி நிலை­யத்­தில் அவர் தமது பய­ணத்­தைத் தொடங்­கி­னார்.

நேரடி ஒன்­று­கூ­டல்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­ட­தால் இணை­யத்­தில் பிர­சா­ரம் தீவிரமடைந்து உள்ளது. அந்­தப் பிர­சா­ரம் தனி­நபர்களின்­ பெ­ய­ரைக் குறிப்­பிட்டு தாக்­கு­வ­தும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் சேற்றை வாரி இறைக்­கும் வகை­யி­லும் நடை­பெ­று­வ­தாக ஊட­கங்­கள் குறிப்­பி­டு­கின்­றன. அத­னைக் கவ­னத்­தில் கொண்ட மலாக்கா காபந்து அர­சாங்க முதல்­வ­ரான சுலை­மான் முகம்­மது அலி, தமது கட்­சி­யி­னர் இணை­யத்­தில் தகாத வார்த்­தை­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டாம் என தடை விதித்­துள்­ளார். லெண்டு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான அவர், எதிர்த்­த­ரப்பினர் மீதோ அர­சு கவி­ழக் கார­ண­மான 4 எம்­எல்­ஏக்­கள் மீதோ இணை­யப் பிர­சா­ரத்­தில் பெயர் குறிப்­பிட்டு தாக்கவேண்­டாம் என்று அவர் தமது கட்­சி­யி­ன­ரி­டம் கூறி­யுள்­ளார்.

இந்த நான்கு எம்­எல்­ஏக்­கள் ஆத­ரவை விலக்­கி­ய­தன் கார­ண­மாக அக்­டோ­பர் 4ஆம் தேதி மலாக்கா அர­சாங்­கம் கவிழ்ந்­தது.

"நமக்கு மேல் ஒரு­வர் இருக்­கி­றார். நமது வெற்றி தோல்­வியை அவர் தீர்­மா­னிப்­பார். அத­னால் எவ­ரை­யும் பெயர் குறிப்­பிட்டு தாக்­கிப் பிர­சா­ரம் செய்ய வேண்­டாம்.

"வெற்றி, தோல்வி என்­பது தேர்­த­லில் தவிர்க்க முடி­யா­தவை. அதற்­காக மக்­கள் மன­தில் எதிர்த்­

த­ரப்­பி­ன­ரைப் பற்­றிய தவ­றான எண்­ணங்­களை ஏற்­ப­டுத்த வேண்­டாம்," என செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் திரு சுலைமான் கூறினார்.