பேங்காக்: கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் கொவிட்-19 தொற்றின் புதிய அலை உருவாகிவிடுமோ என்ற அச்சம் 70 விழுக்காட்டு தாய்லாந்து மக்களிடம் காணப்படுவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கையில் தாய்லாந்து அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. டிசம்பர் 1 முதல் பொழுதுபோக்குக் கூடங்கள், மதுபானக் கூடங்கள் உள்ளிட்ட பலவற்றைத் திறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு திறக்கப்பட்டால் புதிய தொற்றுச் சம்பவங்கள் உருவாகும் என 72 விழுக்காட்டினர் அதிகமாகக் கவலைப்படுவதாகவும் 28 விழுக்காட்டினர் ஓரளவே கவலைப்படுவதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. பேங்காக் பல்கலைக்கழகம் முன்னின்று நடத்திய 'பேங்காக் கருத்துக்கணிப்பில்' நாடு முழுவதும் 1,173 பேர் கலந்துகொண்டு கருத்துக் கூறினர்.
திறந்தால் வந்துவிடும்: தாய்லாந்தில் அச்சம்
1 mins read
-

