திறந்தால் வந்துவிடும்: தாய்லாந்தில் அச்சம்

திறந்தால் வந்துவிடும்: தாய்லாந்தில் அச்சம்

1 mins read
706a39f8-9d85-486b-959d-6b44ab367984
-

பேங்­காக்: கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­னால் கொவிட்-19 தொற்­றின் புதிய அலை உரு­வா­கி­வி­டுமோ என்ற அச்­சம் 70 விழுக்­காட்டு தாய்­லாந்து மக்­க­ளி­டம் காணப்­ப­டு­வ­தாக அண்­மை­யில் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது. கொவிட்-19 பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த விதிக்­கப்­பட்ட பல கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தும் நட­வ­டிக்­கை­யில் தாய்­லாந்து அர­சாங்­கம் ஈடு­பட்­டுள்­ளது. டிசம்­பர் 1 முதல் பொழு­து­போக்­குக் கூடங்­கள், மது­பா­னக் கூடங்­கள் உள்­ளிட்ட பல­வற்­றைத் திறக்­கும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வாறு திறக்­கப்­பட்­டால் புதிய தொற்­றுச் சம்பவங்­கள் உரு­வா­கும் என 72 விழுக்­காட்­டி­னர் அதி­க­மா­கக் கவ­லைப்­ப­டு­வ­தா­க­வும் 28 விழுக்­காட்­டி­னர் ஓர­ளவே கவ­லைப்­ப­டு­வ­தா­க­வும் அந்த ஆய்வு குறிப்­பி­டு­கிறது. பேங்­காக் பல்­க­லைக்­க­ழ­கம் முன்­னின்று நடத்­திய 'பேங்­காக் கருத்­துக்­க­ணிப்­பில்' நாடு முழு­வ­தும் 1,173 பேர் கலந்துகொண்டு கருத்­துக் கூறி­னர்.