ஜப்பானிய பிரதமரின் பலத்தை கணிக்கும் தேர்தல்

1 mins read
9c862af2-0886-4375-a099-e9191b9e588c
தோக்கியோவில் உள்ள ஒரு வாக்களிப்பு மையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற வாக்களிப்பு. படம்: இபிஏ -

தோக்கியோ: ஜப்­பா­னின் நாடா­ளு­மன்­றக் கீழ­வைக்கு நேற்று தேர்­தல் நடை­பெற்­றது. கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளுக்கு இடை­யில் ஏரா­ள­மான மக்­கள் வாக்­க­ளித்­த­னர்.

இம்­மா­தம் பிர­த­மர் பொறுப்பை ஏற்ற ஃபுமியோ கிஷி­டா­வுக்­கும் அவ­ரது சுதந்­திர ஜன­நா­யக் கட்­சிக்­கும் இந்­தத் தேர்­தல் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தா­கக் கரு­தப்­

ப­டு­கிறது.

தம் மீது மக்­கள் எந்த அள­வுக்கு நம்­பிக்கை வைத்­துள்­ள­னர் என்­ப­தைச் சோதித்­துப் பார்க்க தேர்­த­லுக்கு அழைப்பு விடுத்­தார் திரு கிஷடா.

இவ­ரது அர­சாங்­கத்தை மக்­கள் ஏற்­றுக்­கொள்­வார்­களா அல்­லது நிரா­க­ரிப்­பார்­களா என்­பது வாக்கு எண்­ணிக்­கை­யில் தெரிந்­து­வி­டும். ஆத­ரவு குறைந்­தால் உல­கின் மூன்­றா­வது பொரு­ளி­யல் நாடான ஜப்­பா­னில் நிலை­யற்ற அர­சி­யல் நில­வ­ரம் உரு­வா­கும் சாத்­தி­யம் உள்­ளது. 465 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட ஜப்­பா­னிய நாடா­ளு­மன்­றத்­தில் அறு­திப் பெரும்­பான்மை பலம்­பெற 233 இடங்­களில் வெற்றி பெற­வேண்­டும். ஆளும் சுதந்­திர ஜன­நா­ய­கக் கட்சி வசம் 276 உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர். தேர்­த­லுக்­குப் பின்­னர் இந்த எண்­ணிக்கை குறை­யக்­

கூ­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.