செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e6687f2e-8a03-4648-bf1e-becab39287ab
-

நீண்டகாலத்துக்குப் பின் தலிபான் தலைவர் நேரில் தோன்றினார்

காபூல்: தலி­பான் அமைப்­பின் உயர் மட்டத் தலைவர்களில் ஒருவரான ஹைபத்­துல்லா அகுண்ட்­ஸாடா (படம்) 2016ஆம் ஆண்டுக்குப் பின் சனிக்­கி­ழமை முதல்­மு­றை­யாக பொது­வெ­ளி­யில் தோன்­றி­னார்.

ஆப்­கா­னிஸ்­தா­னின் தென்

­ப­குதி நக­ரான கந்­த­கா­ரில் தமது ஆத­ர­வா­ளர்­க­ளி­டையே அவர் உரை­யாற்­றி­ய­தாக தலி­பா­னின் அதி­கா­ர­பூர்­வத் தக­வல் தெரி­வித்­தது. இஸ்­லா­மிய இயக்­கத்­தின் ஆன்­மிகத் தலை­வர் பொறுப்பை 2016ஆம் ஏற்­றது முதல் அவர் தனித்து வாழ்ந்து வந்­தார்.

ஆப்­கா­னிஸ்­தா­னின் ஆட்­சிப் பொறுப்பை தலி­பான்­ இயக்கம் கைப்­பற்­றிய பின்­ன­ரும் அவர் வெளி­யில் தோன்­ற­வில்லை. ஆகஸ்ட் மாத நடுப்­ப­கு­தி­யில் காபூலை முழு­மை­யா­கக் கைபற்­றிய பின்­னர் தலி­பான் அர­சாங்­கம் அமைந்­த­போது அகுண்ட்­ஸா­டா­வைப் பற்­றிய தக­வல் எது­வும் வெளி­யா­காத நிலை­யில் அவர் மர­ண­ம­டைந்­து­விட்­ட­தாக வதந்­தி­கள் பர­வின. இந்­நி­லை­யில் கந்­த­கா­ரில் உள்ள ஒரு சம­யப்­பள்­ளிக்கு அவர் சனிக்­கி­ழமை வரு­கை­ய­ளித்­த­தா­க­வும் அங்­கி­ருந்த படைத் தலை­வர்­க­ளு­டன் அவர் உரை­யா­டி­ய­தா­க­வும் தலி­பான் சமூக ஊட­கக் கணக்­கு­களில் பர­விய குரல் பதிவு ஒன்று தெரி­வித்­தது. போரில் உயிர்த்­தி­யா­கம் செய்த தலி­பான் வீரர்­க­ளுக்­கும் காய­ம­டைந்த வீரர்­க­ளுக்­கும் அவர் வழி­பாடு நடத்­து­வது அந்த பத்து நிமிட ஒலிப்­ப­தி­வில் பதி­வாகி இருந்­தது.

துரத்தி துரத்தி முட்டி ய எருது: ஸ்பெயின் திருவிழாவில் மரணம்

மட்ரிட்: ஸ்பெயினில் நடைபெற்ற எருது ஓட்ட திருவிழாவில் 55 வயது ஆடவர் ஒருவர் மாடு முட்டி மரணமடைந்தார். சனிக்கிழமை ஒன்டா என்னும் நகரில் இச்சம்பவம் நிகழ்ந் தது. கொவிட்-19 பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எருது ஓட்ட திருவிழா, கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அதன் பிறகு ஸ்பெயினில் மாடு முட்டி உயிரிழந்த முதல் சம்பவம் பதிவாகி உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. இறந்தவரைப் பற்றிய விவரங்களை ஒன்டா நகர மன்றம் வெளியிடவில்லை. திருவிழாவில் பங்கேற்ற எருது ஒன்று இவரைத் துரத்தி துரத்தி முட்டியதாகவும் இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியதாகவும் அச்செய்தி கூறியது. மேலும் தலையிலும் காயம் ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அந்த ஆடவர் உயிரிழந்தார்.

மலேசியாவில் வேலையின்மை அதிகரித்தாலும் ஆள் பற்றாக்குறை

கோலாலம்பூர்: மலேசியாவில் வேலையின்மை விகிதம் அதிமாக இருந்தபோதிலும் சில முக்கிய துறைகளில் ஆள் பற்றாக்குறை நிலவுவதாகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அதற்குப் பல காரணங்கள் உள்ளதாகவும் குறிப்பாக வெளி நாட்டு ஊழியர்களின் ஒர்க் பெர்மிட் காலாவதி ஆவது, கொள்ளைநோய் காரணமாக வர்த்தகங்களை திறப்பதும் மூடுவதும் திரும்பத் திரும்ப நடைபெறுவது போன்றவை அவற்றில் முக்கியம் என்றும் மலேசியாவின் தேசிய வர்த்தக, தொழில் சபைத் தலைவர் லோ கியன் சுவான் அண்மையில் கூறினார். 2018ஆம் ஆண்டு 1.9 மில்லியனாக இருந்த வெளி நாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 800,000 குறைந்து 1.1 மில்லியன் ஆகிவிட்டதாகவும் இது ஊழியரணி யில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.