தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒருவருக்குக் கிருமித்தொற்று; டிஸ்னிலேண்ட் கேளிக்கை பூங்காவிற்குள் பூட்டப்பட்ட மக்கள்

1 mins read
729c43ba-6e9a-404c-8bc4-f6601eaf01ba
-

‌ஷாங்­காய்: சீனா­வின் ‌ஷாங்­காய் நக­ருக்­குச் சென்ற பெண்­மணி ஒரு­வ­ருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து டிஸ்னி­லேண்ட் கேளிக்கை பூங்கா மூடப்­பட்­டது.

ரோலர் கோஸ்­டர் ராட்­டி­னம், மணற்­கோட்டை என தங்­கள் நேரத்தை மகிழ்ச்­சி­யாக கழிப்­ப­தற்­காக கேளிக்கை பூங்­கா­வில் மக்­கள் காத்­துக்கொண்­டி­ருந்த நேரத்­தில், அதி­கா­ரி­கள் மக்­கள் வெளியே செல்ல முடி­யா­த­படி பூங்­கா­வின் கத­வைப் பூட்­டி­விட்­ட­னர்.

மக்­கள் வெளியே செல்­வ­தற்கு முன் அவர்­க­ளுக்­குக் கிரு­மித் தொற்று இல்லை என்­பதை உறு­திப் படுத்­து­வ­தற்­காக அவ்­வாறு செய்­யப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

பூங்­கா­விற்­குள் இருந்த 34,000 பேருக்­கும் கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது.

நேற்­று­முன்­தி­னம் நள்­ளி­ரவு வரை இந்த பரி­சோ­தனை நீடித்­த­தாக பூங்கா அதி­கா­ரி­கள் சொன்­னார்கள்.

அவர்­களில் யாருக்­கும் தொற்று உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்­றா­லும் அடுத்த இரண்டு நாட்­க­ளுக்கு அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்­டும் என்­றும் அதன் பிறகு மீண்­டும் பரி­சோ­தனை செய்து­கொள்ள வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, ‌ஷாங்­காய்க்­குச் சென்ற பெண்­மணி, டிஸ்­னி­லேண்ட் பூங்­கா­விற்­குச் சென்­றாரா என்­பது குறித்து அதி­கா­ரி­கள் தொடர்பு தட­ம­றிய விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

கிரு­மித்­தொற்றை வெற்­றிக்­

க­ர­மாக களைந்த சீனா, அது மீண்­டும் பெரு­ம­ள­வில் பர­வா­மல் இருக்க கடு­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கிறது.