தாய்லாந்தின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம்

தாய்லாந்தின் சில பகுதிகளில் திடீர் வெள்ளம்

1 mins read
af927025-0eac-4d3a-af6b-6d8a70ee2c2e
வெள்ளத்தில் மூழ்கி பழுதான மோட்டார்சைக்கிள். படம்: இபிஏ -

பேங்­காக்: தாய்­லாந்­துத் தலை­ந­கர் பேங்­காக்­கில் சாவ் ஃப்ராயா ஆற்­றுக்கு அருகே இருக்­கும் பல பகுதி­களில் நேற்று திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது. பலத்த மழை பொழிந்­த­தாலும் சாவ் ஃப்ராயா ஆற்று வெள்­ளம் பெருக்­கெ­டுத்­தோ­டி­ய­தாலும் வெள்­ளம் ஏற்­பட்­டது.

பேங்­காக்­கி­லும் சமுட் ப்ராக்­கான் மாநி­லம் உள்­ளிட்ட அதன் சுற்று வட்­டா­ரங்­கள் சில­வற்­றி­லும் வெள்­ளம் ஏற்­பட்­டது. சில பகு­தி­களில் மக்­கள் பட­கு­களில் பய­ணம் செய்­த­னர். வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட வாக­னங்­கள் பழு­தா­யின. சென்ற மாதமும், பலத்த மழை­யால் மத்­திய, தாய்­லாந்­தின் பல இடங்­க­ளில் வெள்­ளம் ஏற்­பட்­டது.