வெல்லிங்டன்: தனது ஆயுள் காலத்திற்குச் சிறையில் இருக்கவேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட, நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரின் பள்ளிவாசல் ஒன்றில் தாக்குதல் நடத்திய பிரென்டன் டரான்ட் (படம்) தனது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இப்படிப்பட்ட சிறைத் தண்டனை நியூசிலாந்தில் யாருக்கும் விதிக்கப்படவில்லை.
'வைட் சுப்ரெமசிஸ்ட்' எனப்படும் வெள்ளை இனத்தவருக்கு முன்னுரிமை இருக்கிறது என்பதை நம்புவதாகச் சொல்லும் 31 வயது டரான்ட், 2019ஆம் ஆண்டில் பள்ளிவாசல் தாக்குதலை நிகழ்த்தினார்.
தன் மீது சுமத்தப்பட்டிருந்த 51 கொலைக் குற்றச்சாட்டுகள், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 40 குற்றச்சாட்டுகள், ஒரு பயங்கரவாதக் குற்றச்சாட்டு ஆகியவற்றை டரான்ட் சென்ற ஆண்டு ஒப்புக்கொண்டார்.