'தடுப்பூசி போடாதவர்கள் உயிரிழக்கும் ஆபத்து அதிகம்'

'தடுப்பூசி போடாதவர்கள் உயிரிழக்கும் ஆபத்து அதிகம்'

1 mins read
154adea1-3164-47c6-a561-3fb4ed84f9ee
-

சிட்னி: கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளா­த­வர்­கள், தீவிர சிகிக்சை பிரி­வில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்கோ, மாண்டு போவ­தற்­கான ஆபத்தோ 16 மடங்கு அதி­கம் என்று ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நியூ சவுத் வேல்ஸ் மாநி­லம் வெளி­யிட்­டு உள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே கிரு­மித்­தொற்றை ஆஸ்­தி­ரே­லியா நிரந்­தர நோயாகக் கையா­ளத் தொடங்­கி­யுள்ள இவ்­வே­ளை­யில், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளு­மாறு மக்­களை அதி­கா­ரி­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­தம் 80 விழுக்­காட்டை நெருங்­கி­ய­வு­டன் சிட்னி, மெல்­பர்ன், கான்­பரா ஆகிய நக­ரங்­களில் நீடித்த நீண்ட நாள் முடக்­க­நிலை தளர்த்­தப்­பட்­டது.

அக்­டோ­பர் மாத முற்­ப­குதி வரை­யி­லான நான்கு மாதங்­களில் 412 பேர் கிரு­மித்­தொற்­றால் மாண்­ட­னர். அவர்­களில் 11 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் என்­றும் அவர்­க­ளின் சரா­சரி வயது 82 என­வும் நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகா­தா­ரத் துறை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் தீவிர சிகிச்சை பிரி­வில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோ­ரில் மூன்று விழுக்­காட்­டி­னர் மட்­டுமே முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் என்­கிறது அறிக்கை.

அது­போல் ஜூன் 16ஆம் தேதிக்­கும் அக்­டோ­பர் 7ஆம் தேதிக்­கும் இடை­யில் தொற்­றுக்கு ஆளான 61,800 பேரில் 63 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் என்­ப­தும் தெரிய வந்­து உள்­ளது. தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக மாண்டு போவ­தற்­கா­ன­ ஆ­பத்து 11 மடங்கு அதி­கம் உள்­ள­தாக சென்ற செப்­டம்­பர் மாதம் அமெ­ரிக்கா கூறியது.