1எம்டிபி ஊழல்: தந்தையின் கொள்கைகள் தவறாக பயன்படுத்தப்பட்டன

1எம்டிபி ஊழல்: தந்தையின் கொள்கைகள் தவறாக பயன்படுத்தப்பட்டன

1 mins read
51ba5122-7661-4ee7-85b5-02080bd84fb8
-

கோலாம்­பூர்: மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­ம­ரும் தனது சகோ­த­ர­ரு­மான நஜிப் ரசாக், 1எம்­டிபி ஊழ­லில் தாம் குற்­ற­மற்­ற­வர் என்­பதை நிரூ­பிக்க முடி­யும் என்று தான் நம்­பு­வ­தாக கூறி­யுள்­ளார் முன்­னாள் சிஐ­எம்பி வங்­கித் தலைமை நிர்­வா­கி­யும் தலை­வ­ரு­மான நஜிர் ரசாக்.

1970களில் நாட்டை வழி­ந­டத்­திய தங்­க­ளது தந்தை ரசாக் ஹுசைன் விட்­டுச்­சென்ற அமைப்பைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­ய­தால் பில்­லி­யன்­க­ணக்­கான டாலர்­கள் திரு­டப்­பட்­ட­தாக அவர் சொன்­ னார்.

திங்­க­ளன்று வெளி­யி­டப்­பட்ட தனது சுய­ச­ரி­தை­யில், ஒப்­பந்­தங்­கள், உரி­மங்­கள், உயர் பத­வி­களை வழங்­கு­வ­தில் ஒதுக்­கீ­டு­க­ளின் முறை இப்­போது ஊழ­லில் சிக்­கி­யுள்­ள­தா­கக் கூறும் விமர்­ச­னங்­களை நசீர் எதி­ரொ­லிக்­கி­றார்.

தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்­டி­யில், நஜிப் நிர­ப­ராதி என்று நினைக்­கி­றாரா அல்­லது இறுதியில் நிர­ப­ராதி என்று விடு­விக்­கப்­பட்­டா­லும் தோல்­விக்கு அவர் பொறுப்­பேற்க வேண்­டுமா என்­பது குறித்து தனது கருத்து ­களை தெரி­விக்க நஜிர் மறுத்­து­விட்­டார்.