கட்டாய தடுப்பூசிக்கு எதிராக நியூசிலாந்தில் ஆர்ப்பாட்டம்

நியூசிலாந்தில் கிட்டத்தட்ட

80 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும், கொவிட்-19 தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது, முடக்கநிலை ஆகியவற்றுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அமைதியான முறையில் தங்களது ஆர்ப்பாட்டத்தை நடத்தினாலும், நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர்கள் கூடியதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அப்போது அவர்கள், 'விடுதலை' என்று முழக்கமிட்டுக் கொண்டும் பதாகைகளை ஏந்திக்கொண்டும் சென்றனர். ஆக்லாந்தில் இன்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளது. பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இன்று அங்கு செல்லும்போது ஆர்ப்பாட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!