பெலாரஸ் மீது பொருளியல் தடை விதிக்கப்படலாம்

பெலாரஸ் மீது பொருளியல் தடை விதிக்கப்படலாம்

1 mins read
373ee772-b953-4384-a12d-68f721a8e590
-

ஐ.நா.: பெலா­ர­ஸின் போலந்து எல்­லைப் பகு­தி­யில் நூற்­றுக்­கணக்­கான குடி­யே­றி­கள், குழந்­தை­க­ளு­ட­னும் முதி­யோ­ரு­ட­னும் சிக்­கித் தவித்து வரு­கின்­ற­னர். அவர்­க­ளால் பெலார­ஸ் நாட்டுக்­குள்­ளும் நுழை­ய­மு­டி­ய­வில்லை. அண்டை நாடான போலந்­துக்­குள்­ளும் நுழை­ய­மு­டி­ய­வில்லை.

இந்த நெருக்­க­டியை நிரந்­த­ர­மா­கக் கட்­டுப்­ப­டுத்த பெலா­ரஸ் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­க­வில்லை. இது அண்டை நாடுகளின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் செயல் என்று ஐரோப்பிய நாடுகள் கண்டித்துள்ளன. இது தொடர்பாக ஐக்­கிய நாடு­கள் பாது­காப்பு மன்­றம் நேற்று அவ­ச­ரக் கூட்­டம் ஒன்றை கூட்­டி­யது. நல்­வாழ்­வுக்­காக ஏங்கி உயி­ரைக் கையில் பிடித்­துக்­கொண்டு கடுங்­கு­ளி­ரில் சிக்­கித் தவிக்­கும் இரண்­டா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோரை பெலா­ரஸ், அர­சி­யல் நோக்­கங்­க­ளுக்­காக கண்­டு­கொள்­ளா­மல் விட்­டு­விட்­டது என்று அந்நாடுகள் சாடி­யுள்­ளன. அத்­து­டன் அந்­நாட்­டில் மனித உரிமை மீறல்­களும் அதி­க­ரித்­துக்­கொண்டே போகிறது என ஐநா பாது­காப்பு மன்­றம், ஐரோப்­பிய நாடு­கள், அமெ­ரிக்கா ஆகி­யவை இணைந்து வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தன. மனித உரிமை மீறலுக்காக பெலாரஸ் மீது புதிய தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த வாரம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.