பாதுகாப்பாக இருக்குமாறு மலேசிய மக்களுக்கு அறிவுரை

பாதுகாப்பாக இருக்குமாறு மலேசிய மக்களுக்கு அறிவுரை

1 mins read
f1f8eb13-c88e-40ad-b5f2-88fa3ac1e7e6
-

கோலா­லம்­பூர்: தொடர்ந்து முகக் கவ­சங்­களை அணி­யு­மா­றும் கூட்­ட­மான இடங்­க­ளைத் தவிர்க்­குமாறும் மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் அந்­நாட்டு மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளார். மலே­சி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வதால் அவர் டுவிட்­டர் வாயி­லாக அறி­வுரை வழங்­கி­னார்.

குறிப்­பாக மூத்த குடி­மக்­கள் தங்­க­ளைப் பாது­காத்­துக்­கொள்ள பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளவேண்டும் எனத் திரு கைரி குறிப்­பிட்­டார்.