தீக்கு இரையான 4 வீடுகள், 5 செல்லப்பிராணிகள்

தீக்கு இரையான 4 வீடுகள், 5 செல்லப்பிராணிகள்

1 mins read
bb554ac2-3fc5-4ffd-a0c3-db1645382b7a
தீச்சம்பவத்திற்குப் பிறகு என்.விஜயா (இடம்) மற்றும் அவரின் மகள் இருவரும் கண்ணீர் விட்டு அழும் காட்சி. படம்: பெர்னாமா -

நெகிரி செம்­பி­லான்: மலே­சி­யா­வின் நெகிரி செம்­பி­லா­னின் மன்­டின் பகு­தி­யில் நேற்று காலை மூண்ட தீயில் நான்கு வீடு­கள் எரிந்து சாம்­ப­லா­கின.

அத்­து­டன் ஆறு பூனை­கள், ஒரு நாய் ஆகி­ய­வை­யும் தீக்கு இரை­யா­கின. தப்­பிக்க முடி­யா­மல் பிராணி­கள் புகை­யைச் சுவா­சித்து மாண்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

தம் வீட்­டுக் கூடத்­தில் இளைப்­பா­றிக்­கொண்­டி­ருந்த என்.விஜயா, 52, புகை நாற்­றத்­தால் எழுந்­த­தா­க­வும் தீ வெகு­வி­ரை­வா­கப் பர­வி­யதைப் பார்த்­த­தா­க­வும் கூறி­னார்.

உடனே தம் இரு பிள்­ளை­களுக்­கும் தெரி­வித்­தார். பிள்­ளை­களில் ஒரு­வ­ருக்­குக் காலும் முறிந்­தி­ருந்­தது. பணப்­பை­யைத் தவிர வேறு எதை­யும் அவர்­கள் எடுக்க முடி­ய­வில்லை என்று விஜயா தெரி­வித்­தார். யாரும் இல்லாத அண்டை வீட்­டி­ல் நெருப்பு மூண்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.