ஐரோப்பாவை மீண்டும் அச்சுறுத்தும் கொவிட்-19

ஐரோப்பாவை மீண்டும் அச்சுறுத்தும் கொவிட்-19

2 mins read
660d81b8-184e-40f6-b237-1499e97c0e19
ஆஸ்திரியாவில் கிருமிப் பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கிட்டத்தட்ட 2 மில்லியன் பேர் முடக்கநிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அந்நாட்டின் வியன்னா நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டச் சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் காத்துக்கொண்டிருந்தனர். படம்: ஏஎஃப்பி -

லண்­டன்: ஐரோப்­பிய நாடு­களில் கிரு­மிப் பர­வல் மீண்­டும் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யுள்­ளது. அத்­து­டன் குளிர்­கா­ல­மும் தொடங்­க­வுள்­ள­தால், கிரு­மிப் பர­வல் மோச­மா­கக்­கூ­டும் என்ற அச்­சு­றுத்­த­லும் நில­வு­கிறது.

ஐரோப்பா முழு­வ­தி­லும் சென்ற மாதம் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னோர் எண்­ணிக்கை 50 விழுக்­காட்­டிற்­கும் மேல் அதி­க­ரித்­துள்­ளது.

ஒரு சில ஐரோப்­பிய நாடு­களில் கிரு­மிப் பர­வல் தொடங்­கி­ய­தி­லி­ருந்து ஆக அதி­க­மா­னோ­ருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

ஜெர்­ம­னி­யில் சென்ற வாரம் ஒரே நாளில் 50,000த்திற்­கும் அதி­க­மா­னோர் தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­னர்.

நெதர்­லாந்­தி­லும் ஆக அதி­க­மாக 16,000த்திற்­கும் அதி­க­மா­னோர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். இத­னால் சென்ற சனிக்­கி­ழமை முதல் மூன்று வாரங்­க­ளுக்­குக் குறிப்­பிட்ட சில பகு­தி­களில் முடக்­க­நிலை கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

பெல்­ஜி­யத்­தில் முகக்­க­வ­சம் மீண்­டும் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை அதி­கா­ரித்­தி­ருந்­தா­லும் முந்தைய கிரு­மிப் பர­வல் காலத்­தோடு ஒப்­பி­டும்­போது உயி­ரி­ழப்­பு­கள் பெரு­ம­ள­வில் இல்லை. அதற்கு தடுப்­பூ­சி­யே பெரி­தும் கார­ணம் என்று சுகா­தார நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

ருமே­னியா, பல்­கே­ரியா உள்­ளிட்ட கிழக்கு ஐரோப்­பிய நாடு­களில் தொற்று பாதிப்­பும் உயி­ரி­ழப்­பும் அதி­க­ரித்­துள்­ளது.

ஆஸ்­தி­ரி­யா­வில் தடுப்­பூசி போடா­த­வர்­கள் வீட்­டை­விட்டு வெளியே செல்­லத் தடை விதிக்கப்­ பட்­டுள்­ளது. இக்கட்­டுப்­பாட்­டைக் கொண்டு வரு­வது குறித்து ஜெர்­ம­னி­யும் பரி­சீ­லித்து வரு­கிறது.

இதற்­கி­டையே, பிரிட்­டி‌ஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் வரும் குளிர்­கா­லத்­தில் மீண்­டும் ஒரு முடக்­க­நிலை வராது என்று சொல்ல

முடி­யாது எனக் கூறி­னார்.

"தற்­போ­தைய நிலை­யில் கட்­டுப்­பா­டு­கள் தேவையாகத் தெரிய வில்லை. ஆனால் கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக நாம் மெத்­த­ன­மாக இருந்­து­விட முடி­யாது," என்­றார் அவர்.

கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ராக கட்­டுப்­பா­டு­க­ளைக் கொண்டு வரு­வது போரிஸ் ஜான்­ச­னுக்கு அர­சி­யல் ரீதி­யாக ஆபத்­தா­ன­தாக இருக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.