'லிவர்பூல் கார் வெடிப்பு ஒரு தீவிரவாதத் தாக்குதல்'

'லிவர்பூல் கார் வெடிப்பு ஒரு தீவிரவாதத் தாக்குதல்'

1 mins read
995a844e-2e50-484a-9549-02e5cf64c451
-

லிவர்­பூல்: லிவர்­பூல் பெண்கள் மருத்து­வ­ம­னைக்கு வெளியே நடந்த கார் குண்­டு­வெ­டிப்பு சம்­ ப­வத்தை பிரிட்­டி‌ஷ் போலி­சார் தீவி­ர­வா­தத் தாக்­கு­தல் என்று வகைப்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

இந்த குண்­டு­வெ­டிப்­பின்­போது மாண்­டு­போ­ன­வர், டாக்­சி­யில் லிவர்­பூல் மருத்­து­வ­ம­னையை அடைந்­த­தா­க­வும் அப்­போது காருக்­குள் தன்­னு­டன் அவர் வைத்­தி­ருந்த நாட்டு வெடி­குண்டு வெடித்­த­தா­க­வும் போலி­சார் கூறி­னர்.

இமாத் அல் சுவீல்­மின் (படம்) எனும் அந்த 32 வயது ஆட­வர் வாட­கைக்­குத் தங்­கி­யி­ருந்த வீட்­டில் போலி­சார் மேற்­கொண்ட சோத­னை­யில் அதற்­கான முக்­கிய ஆதா­ரம் கிடைத்­தா­க­வும் 2017ல் அவர் இஸ்­லா­மி­லி­ருந்து கிறிஸ்­துவ மதத்­திற்கு மாறி­ய­வர் என்­றும் அவர்­கள் சொன்­னார்­கள்.

ஈராக்கில் இருந்து குடியெர்ந்த அவருக்கு மனநல பிரச்சினைகள் இருந்ததாகவும் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

இதை­ய­டுத்து, குண்­டு­வெ­டிப்பு தொடர்­பில் கைது செய்­யப்­பட்ட நால்­வ­ரும் எந்­தக் குற்­றச்­சாட்­டும் இல்­லா­மல் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று நடந்த குண்­டு­வெ­டிப்­பிற்கு முன்பு காரின் ஓட்­டு­நர் தப்­பிக் குதித்து உயிர்

பிழைத்­தார்.

டாக்சியில் பயணித்தவர் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரைக் காருக்குள் வைத்து பூட்டிவிட்டு தப்பிய ஓட்டுநரின் சமயோசிதத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த தாக்­கு­த­லைத் தொடர்ந்து, பிரிட்­ட­னில் தீவி­ர­வாத அச்­சு­றுத்­த­லுக்­கான எச்­ச­ரிக்கை 'கடுமை' நிலைக்கு உயர்த்­தப்­பட்­டுள்­ளது. அதா­வது தீவிரவாத தாக்­கு­த­லுக்­கான சாத்­தி­யம் அதி­கம் உள்­ளதை இந்த எச்­ச­ரிக்கை நிலை குறிப்­ பி­டு­கிறது.

ஏனெ­னில் ஒரே மாதத்­தில் லிவர்­பூ­லில் நடந்த இரண்டாவது தாக்­கு­தல் சம்­ப­வம் இது. முன்பு நடந்த தாக்­கு­த­லில் கன்­சர்­வேட்­டிவ் கட்சியின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சர் டேவிட் அமெஸ் மாண்டார்.