சுமத்ரா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் வேட்டைக்காரர்கள் வைத்த பொறியில் சிக்கிய யானையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அதிகாரிகள் அதன் தும்பிக்கையை அகற்றினர்.
அழிந்து வரும் சுமத்ரா யானைகளில் 700 மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அவற்றுள் ஒன்றான 1 வயது யானைக்குத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பணத்திற்காக காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கம் கொண்டவர்களின் செயல் என்பதை இது வெளிப்படையாக காட்டுவதாக ஆச்சே பகுதி வனவிலங்கு அதிகாரி அயண்டோ கூறினார்.

