பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைப்பு

1 mins read
56e4cc0f-7a1c-4c5c-9cbd-3030b97da2b1
-

சோல்: தென்­கொ­ரி­யா­வில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தைத் தொடர்ந்து, கூடு­தல் தடுப்­பூசி போடு­வ­தற்­கான இடை­வெ­ளியை ஆறு மாதத்­தில் இருந்து நான்கு மாத­மாக குறைக்க திட்­ட­மிட்டு வரு­கிறது.

தென்­கொ­ரி­யா­வில் சுமார்

90 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருந்­தா­லும் அண்­மைய கிரு­மிப் பர­வ­லால் மூத்­தோர் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கிரு­மித்­தொற்று கார­ண­மாக இந்த வாரம் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­களில் 82 விழுக்­காட்­டி­னர் மூத்­தோர். ஒரு மாதத்­திற்கு முன்பு இது 65 விழுக்­கா­டாக இருந்­தது.

தீவிர சிகிச்சைப் பிரி­வில் 30 விழுக்­காட்டு படுக்­கை­கள் மட்­டுமே எஞ்­சி­யி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

75 விழுக்­காட்­டிற்­கும் மேல் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்­கை­கள் நிரம்­பிவிட்டால், முடக்­க­நிலை கொண்டு வரப்­ப­டு­வது பற்றி பரி­சீ­லிக்­கப்­படும் என்று கொரிய நோய்க் கட்­டுப்­பாட்டு அமைப்பு கூறியது.

எனவே 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள், தாதிமை இல்­லங்­கள் மற்­றும் தொற்று அபா­ய­முள்ள பகு­தி­களில் வசிப்­ப­வர்­கள், ஊழி­யர்­கள் ஆறு மாதங்­க­ளுக்­குப் பதி­லாக நான்கு மாதங்­களில் தடுப்­பூசி போட்டுக்கொள்ள கொரிய நோய் கட்­டுப்­பாட்டு அமைப்பு பரிந்­து­ரைத்­துள்­ளது.

ஐம்­பது வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள், போலி­சார், தீய­ணைப்­புத் துறை­யி­னர் போன்­றோர் ஐந்து மாதங்­களில் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள பரிந்­து­ரைக்­கப்­பட்­டு

உள்­ளது.

நேற்று அங்கு 3,187 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். அந்­நாட்­டில் பதி­வான இரண்­டா­வது ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும் இது.