இந்தோனீசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள தேகல் துறைமுகத்தில் நின்றிருந்த
மீன்பிடிப் படகுகளில் சில நேற்று முன்தினம் நள்ளிரவு தீப்பற்றி எரிந்தன. நேற்று காலை வரை எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்பட்டாலும் மத்திய ஜாவா ஆளுநர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
படம்: ராய்ட்டர்ஸ்