வெளிநாட்டு ஊழியர்களின் உதவியை நாடும் தாய்லாந்து

வெளிநாட்டு ஊழியர்களின் உதவியை நாடும் தாய்லாந்து

2 mins read
467e8da1-fe8e-453a-98ae-660e05ef7239
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருக்கும் ஒரு சந்தை. படம்: ராய்ட்டர்ஸ் -

பேங்­காக்: அடுத்த மாதம் முதல் கூடு­த­லான வெளி­நாட்டு ஊழி­யர்­களை தனது நாட்­டிற்­குள் அனு­மதிக்க தாய்­லாந்து திட்­ட­மிட்­டுள்ளது. உற்­பத்­தித் துறை­யைப் பாதிக்­கும் வகை­யில் ஏற்­பட்­டுள்ள மனி­த­வ­ளப் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்க தாய்­லாந்து இந்­ந­ட­வ­டிக்­கையை எடுக்­கிறது.

கொவிட்-19 நெருக்­க­டி­யி­லிருந்து மீண்­டு­வ­ரத் தொடங்­கி­யிருக்­கும் இந்­நாட்­டின் பொரு­ளி­யல் மனி­த­வ­ளப் பற்­றாக்­கு­றை­யால் சவால்­க­ளைச் சந்­திக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

சட்­ட­வி­ரோ­த­மாக வேலை செய்­யும் ஊழி­யர்­கள் தங்­க­ளைப் பதிவு­செய்­து­கொள்ள தாய்­லாந்து இம்­மாத இறு­தி­வரை கால அவ­கா­சம் வழங்­கு­கிறது. மியன்­மார், கம்­போடியோ போன்ற அண்டை நாடு­களி­லி­ருந்து மேலும் எத்­தனை பேரை அனு­ம­திப்­பது என்­ப­தைக் கணிக்க இவ்­வாறு செய்­யப்­படுகிறது. சுமார் 100,000 பேர் கணக்­கில் இடம்­பெ­று­வர் எனத் தான் எதிர்­பார்ப்­ப­தாக தாய்­லாந்­தின் தொழி­லா­ளர் அமைச்­சர் சுச்­சார்ட் சொம்­கி­லின் தெரி­வித்­தார். கூடுதலாகக் கிட்­டத்­தட்ட 300,000 ஊழி­யர்­கள் தேவைப்­ப­டு­வ­தா­கக் கணிக்­கப்­பட்டுள்­ளது.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் தொடங்குவதற்கு முன்பு தாய்லாந்தில் சுமார் 2.5 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் இருந்தனர். கிருமிப் பரவல் சூழல் உருவெடுக்கத் தொடங்கிய பிறகு இவர்களில் குறைந்தது ஐந்தில் ஒரு பங்கினர் நாட்டிலிருந்து வெளியேறினர்.

தாய்­லாந்­தின் பொரு­ளி­யல் 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேல் காணாத அள­வில் சென்ற ஆண்டு 6.1 விழுக்­காடு குறைந்­தது. இவ்­வாண்டு, அது சுமார் 1.2 விழுக்­காடு வளர்ச்சி­ய­டை­யும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

தாய்­லாந்­தின் உற்­பத்தி நிறு­வனங்­க­ளுக்­குக் குறைந்­தது 500,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தேவை என்று அதன் தொழில்­து­றை­கள் சம்­மே­ள­னம் கூறி­யுள்­ளது. குறிப்­பா­கக் கட்­டு­மான, உண­வுத் துறை­களில் சம்­மே­ள­னம் கவ­னம் செலுத்­து­கிறது. அண்டை நாடு­களு­டன் இருக்­கும் இணக்­கக் குறிப்­பு­க­ளின் அடிப்­ப­டை­யில் கூடு­த­லான ஊழி­யர்­க­ளைத் தரு­விக்க தாய்­லாந்து எண்­ணம் கொண்­டுள்­ளது. ஊழி­யர்­கள் அதி­பட்­ச­மாக 14 நாட்­கள் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள நேரி­ட­லாம்.