சீனாவின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்த பிலிப்பீன்ஸ்

சீனாவின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்த பிலிப்பீன்ஸ்

1 mins read
6ad8d27e-863a-403f-b60b-cfadb8eceb62
தென்சீனக் கடலில் உள்ள சீனாவைச் சேர்ந்த கடலோரக் காவல்துறையின் கப்பல்கள். கோப்புப் படம் / ராய்ட்டர்ஸ் -

மணிலா: மணி­லா­வின் இரண்டு பட­கு­களை வழி மறித்து அவற்­றின்­மீது தண்­ணீர் பீய்ச்­சி அடித்த சீனா­வின் மூன்று கட­லோ­ரக் காவல்­து­றைக் கப்­பல்­க­ளுக்கு எதி­ராக பிலிப்­பீன்ஸ் கடு­மை­யான கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­தென அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. சம்­ப­வத்­தின்­போது அப்­ப­ட­கு­கள் தென் சீனக் கட­லில் பிலிப்­பீன்ஸ் உரிமை கொண்­டா­டும் செக்­கண்ட் தாமஸ் ஷோலுக்­குச் சென்­று­கொண்­டி­ருந்­தன.

கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று நிகழ்ந்த சம்­ப­வத்­தில் யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை என்று பிலிப்­பீன்­ஸின் வெளி­யு­றவு அமைச்­சர் டியோ­டோரோ லொக்­சின் சொன்­னார். எனி­னும் பட­கு­கள் ஈடு­ப­டுத்­தப்­பட்ட நட­வ­டிக்­கையை ரத்து செய்ய நேரிட்­டது. அவை, செக்­கண்ட் தாமஸ் ஷோலில் இருக்­கும் ராணு­வப் படை­யி­ன­ருக்கு உணவு வழங்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டி­ருந்­தன. பிலிப்­பீன்­ஸின் கண்­ட­னத்தை முடிந்­த­வரை ஆகக் கடு­மை­யான முறை­யில் மணி­லா­வுக்­கான சீனத் தூத­ரி­டம் தெரி­யப்­படுத்­தி­ய­தா­கத் திரு லொக்­சின் கூறி­னார். பெய்­ஜிங் அதன் நடத்­தை­யைக் கட்­டுப்­ப­டுத்­திக்­கொள்­ளா­விட்­டால் தனிச் சிறப்பு வாய்ந்த இரு­நாட்டு உறவு பாதிப்­ப­டை­யக்­கூ­டும் என்று அவர் எச்­ச­ரித்­தார்.