அமெரிக்காவில் மருந்து மரணம் புதிய உச்சம்

அமெரிக்காவில் மருந்து மரணம் புதிய உச்சம்

1 mins read
6284ff25-220d-43ca-a83c-0ffa7b4b896d
அமெரிக்காவில் ஓராண்டு காலத்தில்மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மாண்டோரின் எண்ணிக்கை முதன்முறையாக 100,000ஐத் தாண்டியது. கோப்புப் படம் / ஏஎஃப்பி -

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் மருந்தை அதி­க­மாக உட்­கொண்­ட­தால் மர­ண­ம­டைந்­தோ­ரின் எண்­ணிக்கை புதிய உச்­சத்­தைத் தொட்டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது. சென்ற ஆண்டு ஏப்­ரல் மாதத்­திற்கும் இவ்­வாண்டு ஏப்­ரல் மாதத்­திற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் இவ்­வாறு மாண்ட அமெரிக்கர்­களின் எண்­ணிக்கை முதன்­மு­றை­யாக 100,000ஐத் தாண்­டி­யுள்­ளது. இது, பெரும் வருத்­தத்­தைத் தரும் புள்ளி விவ­ரம் என அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கூறி­யுள்ளார். கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழல் இப்­பி­ரச்­சினையை மோச­ம­டை­யச் செய்­துள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்த எண்­ணிக்கை, இதற்கு முன்­பி­ருந்த ஓராண்டு காலத்­தில் பதி­வா­ன­தைக் காட்­டி­லும் 28.5 விழுக்­காடு அதி­கம் என்று அமெரிக்கா­வின் 'சிடிசி' எனப்­படும் நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு நிலை­யம் தெரி­வித்­தது. இதன் தொடர்­பில் ஆபத்து விளை­விக்­கக்­கூ­டிய 'ஓப்­பி­யோய்ட்' மருந்தை அதி­க­மாக உட்­கொண்­டோ­ருக்கு உத­வும் 'நாலோக்­சோன்' மருந்தை மக்­கள் எளி­தில் பெற வகை­செய்­ய­வேண்­டும். தனது அர­சாங்­கம் அமெ­ரிக்க மாநி­லங்­களை அதைச் செய்­ய­வைக்­கும் எனத் திரு பைடன் குறிப்­பிட்­டார்.

அமெரிக்காவில் அண்மைக் காலமாக உயி­ருக்கு ஆபத்து ஏற்­படுத்­தக்­கூ­டிய மேலும் பல மருந்­து­களை மக்­க­ளால் சாலை­களில் எளி­தில் வாங்­க­வும் முடி­வதா­கவும் சொல்­லப்­படு­கிறது.