96 விழுக்காடு தொட்ட அவசர சிகிச்சை பிரிவு

96 விழுக்காடு தொட்ட அவசர சிகிச்சை பிரிவு

1 mins read
ecb17ff4-d9d0-423d-9743-99158d9c6368
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் சிலாங்­கூர் மாந­லத்­தில் உள்ள சுங்கை பூலோ மருத்­து­வ­ம­னை­யின் அவ­சர சிகிச்சை பிரி­வில் ஆகக் கடைசி நில­வ­ரப்­படி 96 விழுக்­காட்­டுப் படுக்­கை­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சிலாங்­கூர் சுகா­தா­ரப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. அடுத்த மாதம் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரிக்­கும் என்று அஞ்­சப்­படுவதை முன்­னிட்டு இந்­நிலை உரு­வெ­டுத்­துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதி­யின் சுற்று வட்­டா­ரத்­தில் உள்ள மற்ற மருத்து­வ­ம­னை­க­ளி­லி­ருந்து கொவிட்-19 நோயா­ளி­களை அனு­ம­தித்­து­வ­ரு­வ­தால் தனது அவ­சர சிகிச்சை பிரி­வில் இவ்வாறு நிகழ்ந்துள்ளதாக சிலாங்­கூ­ரின் சுகா­தார இயக்­கு­நர் டாக்டர் ஷ'ஆரி ங்காடிமான் சொன்­னார்.

இதற்கிடையே, மலே­சி­யா­வில் சினோ­வேக், ஆஸ்ட்­ர­ாசெ­னகா பூஸ்­டர் தடுப்­பூ­சி­க­ளுக்கு 'டிசிஏ' எனப்­படும் மருந்­துக் கட்­டுப்­பாட்டு ஆணை­யம் நிபந்­த­னைக்கு உட்­பட்ட அனு­ம­தியை வழங்­கி­யுள்­ள­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. 18 வய­துக்­கும் மேலா­னோ­ருக்கு இந்த பூஸ்­டர் தடுப்­பூ­சி­க­ளைப் போட அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக மலே­சி­யா­வின் சுகா­தா­ரத் தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா கூறி­னார்.