இந்தோனீசியாவில் ஆண்டு இறுதி கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு

1 mins read
146b5d1d-dc5b-4fe5-b8a8-a54ffe9fd838
இந்தோனீசியாவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. இதற்கிடையே 2022ல் இந்தோனீசிய பொருளியல் 5 முதல் 5.5 வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம்: இபிஏ -

ஜகார்த்தா: இவ்­வாண்­டின் இறு­தி­யில் பல்­வேறு கொண்­டாட்­டங்­கள் வரு­வ­தால் விடு­மு­றைக் கால கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் பல்­வேறு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வி­ருக்­கிறது.

பொது­மக்­க­ளின் நட­மாட்­டத்தை சிறந்த வகை­யில் நிர்­வ­கிக்க 3வது நிலை கட்­டுப்­பா­டு­கள் நாடு முழு­வ­தும் அமல்­ப­டுத்­தப்­படும் என்று மனி­த­வள, கலா­சார ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் முஹாட்­ஜிர் எஃபண்டி தெரி­வித்­தார்.

இது குறித்த விவ­ரம் அடுத்த வாரம் வெளி­யி­டப்­படும் என்­றார் அவர்.

டிசம்­பர் 24 முதல் ஜன­வரி 2 வரை புதிய விதி­மு­றை­கள் அம­லில் இருக்­கும்.

ஒவ்­வொரு மாநி­ல­மும் தேசிய விதி­மு­றை­களை பின்­பற்ற வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

ஜாவா, பாலிக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் புதிய விதி­மு­றை­கள் அமல்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்­கிறது.

புத்­தாண்டை வர­வேற்­கும் வாண வேடிக்கை, அணி­வ­குப்­பு­கள் போன்ற நட­வ­டிக்­கை­கள், மக்­களை பெரு­ம­ள­வில் ஈர்க்­கும் நிகழ்­வு­கள் ஆகி­ய­வற்­றுக்கு புதிய விதி­மு­றை­யின் கீழ் தடை செய்­யப்­படும் என எதி­பார்க்­கப்­ப­டு­கிறது.

கிறிஸ்­மஸ் நாள் சிறப்பு பிரார்த்­த­னை­கள் உள்­ளிட்ட சமய நிகழ்ச்­சி­க­ளுக்கு 3வது நிலை கட்­டுப்­ பா­டு­கள் போடப்­படும். இத­னால் வழக்­க­மா­ன­தை­விட பாதி­ய­ளவு மக்­களே சமய நிகழ்ச்­சி­களில் பங்­கேற்க முடி­யும்.

மேலும் கடைத் தொகு­தி­கள், ஹோட்­டல்­கள், உண­வ­கங்­கள், பேரங்­கா­டி­களில் 50 விழுக்­காடு மக்­களே அனு­ம­திக்­கப்­ப­டு­வர். பெரு­ம­ள­வில் மக்­கள் கூடும் கவர்ச்­சித் தலங்­கள் மூடப்­படும். உள்­ளூர் பய­ணங்­கள் அனு­ம­திக்­கப்­ப­டுமா என்­பது தெரி­ய­வில்லை. ஆனால் தற்­போது முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுள்ள பய­ணி­கள் ஜாவா மற்­றும் பாலிக்­குச் சென்­று­வர அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர்.