செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4056fc8f-d9f2-4b7e-8123-6fdbcbc6e09a
-

வியட்னாமில் வர்த்தகங்கள்

மீண்டும் மூடல்

ஹோ சி மின்: வி­யட்­னா­மின் வர்த்­தக மைய­மான ஹோ சி மின் சிட்­டி­யில் புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­கரிப்பால் மது­பா­னக் கூடங்­கள், உடற்­பி­டிப்பு மற்­றும் கர­வோக்கே நிலை­யங்­களை மீண்­டும் மூட உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் 16ஆம் தேதி கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு பொழு­து­போக்கு நிலை­யங்­கள் ெசயல்­பட அனு ­ம­திக்­கப்­பட்­டது. ஆனால் இரண்டு நாட்­க­ளுக்­குள்­ளாக­வே தொற்று மீண்­டும் தலை­தூக்­கி­யுள்­ளது. "அபா­யம் மறைந்­தி­ருப்­ப­தால் கிரு­மிப் பர­வ­லைக் கண்டுப்பி­டிப்­பது சவா­லாக உள்­ளது," என்று நக­ரத்­தின் அதிகாரபூர்வ இணை­யப்பக்­கம் தெரிவித்தது.

ஆடவருக்கு S$42,500 அபராதம்

பெய்ஜிங்: சீனாவில் கிருமித்தொற்றை மறைத்த ஆடவருக்கு 200,0000 யுவான் (S$42,500) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட தண்டனையும் அவருக்கு விதிக்கப் பட்டதாக புளூம்பெர்க் தெரிவித்தது. வியட்னாமுக்கு வர்த்தகப் பயணம் மேற்கொண்ட காவோ என்ற அந்த வாலிபர், கொவிட்-19 நோயாளிகள் தங்கியிருந்த ஹோட்டலில் தங்கியதாகவும் அவருக்கு காய்ச்சல் மற்றும் கொவிட்-19 அறிகுறிகள் ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வியட்னாம் எல்லை யோரமுள்ள குவாங்ஸியில் உள்ள நீதிமன்றம்,

அவருக்கு அபராதத்தையும் சிறைத் தண்டனையையும் விதித்தது.

தொற்று; விமானிகள் நீக்கம்

ஹாங்­காங்: ஹாங்­காங்­கின் கேத்தே பசி­ஃபிக் ஏர்­வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று விமானிகள், கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டதால் பணி­யி­லி­ருந்து நீக்கப் பட்டுள்ளனர். வெளி­நாட்­டில் இருந்­த­போது விமான ஊழி­யர்­க­ளுக்­கான விதி­மு­றை­களை அவர்­கள் மீறி­ய­தாக அந்­நி­று­வ­னம் தெரி­வித்­தது. இந்­தத் தக­வலை முத­லில் வெளி­யிட்ட சவுத் சைனா மார்­னிங் போஸ்ட், ஜெர்­ம­னி­யில் ஹோட்­டலில் தங்கியிருந்த மூவ­ரும் வெளி­யே­றி ­ய­தா­கக் கூறி­யது. இத­னால் மூவருக்கும் தொற்று ஏற்பட்டது. இதை­ய­டுத்து விமா­னி­கள், விமா­னச் சிப்­பந்­தி­கள் உட்­பட 150க்கும் மேற்­பட்­டோ­ர் தனி­மைப்படுத்­தப்­பட்­ட­னர்.

வூஹானில் முதல் தொற்று

வூஹான்: சீனாவின் வூஹான் சந்தையில் கடலுணவு விற்ற பெண் வியாபாரிக்குத்தான் முதல் முறையாக கொவிட்-19 தொற்று ஏற்பட்டது என்று அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் மைக்கல் வோரோபே கண்டுபிடித்துள்ளார். இதற்கு முன்பு அதே நகரத்தைச் சேர்ந்த கணக்காளர் ஒருவருக்கு முதலில் கிருமித்தொற்று ஏற்பட்டதாக நம்பப்பட்டது.