சிங்கப்பூர் $22 மி. திருப்பி வழங்கியது: மலேசியா

சிங்கப்பூர் $22 மி. திருப்பி வழங்கியது: மலேசியா

1 mins read
132fc860-35ae-4cba-bfe3-58a6c3a43620
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் 1எம்­டிபி நிறு­வ­னத்­தின் பல பில்­லி­யன் டாலர் மோச­டி­யு­டன் தொடர்­பு­டைய 16.3 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை (S$22 மி.) சிங்­கப்­பூர் அண்ைம­யில் திருப்­பி­ய­ளித்­த­தாக மலே­சிய ஊழல் தடுப்­புப் பிரிவு தெரிவித்­துள்­ளது.

2009க்கும் 2014க்கும் இடை­ப் பட்ட காலத்­தில் மலே­சிய அர­சாங்க நிதி­யி­லி­ருந்து சுமார் 4.5 பில்­லி­யன் டாலர் நிதி பல்­வேறு வழி­யில் பல நாடு­கள் வழி­யாக எடுக்­கப்­பட்­ட­தாக அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் கூறி யிருந்­த­னர். இந்த நிலை­யில் பில்­லி­யன் கணக்­கான நிதி இன்­ன­மும் கணக்­கில் வர­வில்லை என்று மலே­சிய அரசு கூறி­யுள்­ளது. இது­வரை 20.5 பில்­லி­யன் ரிங்­கிட் (S$6.7 பில்­லி­யன்) மதிப்­புள்ள 1எம்­டிபி ெசாத்துகளை மலே­சியா மீட்­டுள்­ளது. சுவிட்­சர்­லாந்து, குவைத், மொரி­ஷி­யஸ், சைப்­ரஸ், ஹாங்காங் இடங்­களில் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்ள நிதியை மீட்க முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக ஊழல் தடுப்­புப் பிரிவு தெரிவித்­தது.