'ஆதாரத்துடன் விவரங்களை வெளியிடவேண்டும்'

'ஆதாரத்துடன் விவரங்களை வெளியிடவேண்டும்'

1 mins read
71496840-d68b-42bb-af5a-336bb8ac5741
-

ஜெனிவா: டென்­னிஸ் வீராங்­கனை பெங் ஷுவாய் பற்றி விவரங்களை சீனா வெளி­யிட வேண்­டும் என்று அமெ­ரிக்­கா­வும் ஐநா­வும் கோரிக்கை விடுத்­துள்­ளது.

சீனாவின் முன்­னாள் துணைப் பிர­த­மர் மீது பாலி­யல் குற்­றச்­சாட்டு கூறிய பிறகு டென்­னிஸ் வீராங்­கனை பெங் ஷுவாயைக் காண­வில்லை என்ற புகார் எழுந்­த­தது.

இதற்கு சீன அர­சாங்­கம் எந்­தப் பதி­லும் அளிக்­க­வில்லை. ஆனால் அவ­ரின் பதிவு உட­ன­டி­யாக நீக்­கப்­பட்­டது.

இந்நிலையில் பெங் ‌ஷுவாய் நலமுடனும் முழு சுதந்திரத்துடனும் தன்னுடைய வீட்டில் இருப்பதாகவும் விரைவில் வெளியுலகில் காணப்படுவார் என்றும் குளோபல் டைம்ஸ் செய்தியாளர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய முடியவில்லை என்று கூறும் அமெரிக்காவும் ஐநாவும் வீராங்கனை பற்றிய விவரங்களை ஆதாரத்துடன் சீன அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது.