ஆம்ஸ்டர்டாம்: ஐரோப்பாவில் கொவிட்-19 கிருமிப்பரவல் பெருகிய தால் அங்கு அறிவிக்கப்பட்டுள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட் டங்கள் வலுத்துள்ளன.
நெதர்லாந்தில் நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக பலர் கலவரத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அதில் ஐந்து போலிஸ் அதிகாரிகள் காயமுற்றனர். மூன்று மாநிலங்களில் குறைந்தது 40 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
மிதிவண்டிகளுக்குத் தீயிட்டும் வெடிகளை வீசியும் கலவரத்தில் ஈடுபட்ட இளையர்களைக் கலைக்க டச்சு போலிசார் முயன்றனர்.
கலவரக்காரர்களின்மீது அதிகாரிகள் தண்ணீர் பீய்ச்சி அடித்ததுடன் நாய்களைப் பயன்படுத்தினர்.
நெதர்லாந்தில் கடந்த சனிக் கிழமை கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிராக மீண்டும் மூன்று வாரங்களுக்கு முடக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
அதை எதிர்த்து, தி ஹேக், ராட்டர்டாம், அர்க், லிம்பர்க் மாநிலத்தின் சில நகரங்கள் உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.
குறிப்பாக, ராட்டர்டாம் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோசமான வன்முறையை நிறுத்த போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் மூவர் காயமடைந்ததுடன் 51 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வேளையில் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நேற்று முன்தினம் பல்லாயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு தழுவிய முடக்கத்தையும் தடுப்பூசி கள் கட்டாயமாக்கப்படுவதையும் அரசாங்கம் அறிவித்ததே ஆர்ப்பாட்டங்களுக்குக் காரணம். குரோ வேஷிய அரசாங்கம் அரசாங்க ஊழியர்களுக்குத் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கியுள்ளது. இதனால் சினமடைந்த மக்கள் தலைநகர் ஸக்ரேபில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இத்தாலியிலும் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.