பூச்சிக்கொல்லி மருந்துத் தடையைக் கைவிட்ட இலங்கை

1 mins read
57b1539c-597c-49d8-8949-8e188e1cc78f
-

கொழும்பு: இலங்கை அர­சாங்­கம் பூச்­சிக்­கொல்லி மருந்­து­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு எதி­ரான தடையை அகற்­றி­யுள்­ளது. அதன்­வழி, முழுக்க முழுக்க இயற்கை வேளாண் சார்ந்த முதல் உல­க­ நாடாக மாறும் திட்­டத்தை அது கைவிட்­டுள்­ளது.

ஏற்கெ­னவே தேயிலை உரங்­களின் இறக்­கு­ம­தி­யில் விதித்­ திருந்த கட்­டுப்­பா­டு­களை இலங்கை அர­சாங்­கம் கடந்த மாதம் மீட்­டுக்­கொண்­டது. தேயிலை ஏற்­று­மதி, இலங்­கை­யில் ஏற்­று­மதி வரு­வாய் ஈட்­டும் மிகப் பெரிய தொழில்­ துறை­யா­கும்.

இலங்­கை­ அண்மைய மாதங்­களில் கடு­மை­யான பொரு­ளி­யல் நெருக்­கடியால் தத்தளிக்கிறது. உண­வுப்­பொ­ருட்­கள், எண்­ணெய், இதர அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களில் பற்­றாக்­குறை ஏற்­பட்­டது.

கட்­டுப்­பா­டு­களை எதிர்த்து விவ­சா­யி­கள் கொழும்­பில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்த திட்­ட­மிட்­டி­ருந்த நிலை­யில் பூச்­சிக்­கொல்லி மருந்து இறக்­கு­மதி செய்­வ­தற்கு எதி­ரான தடையை அகற்­றி­யுள்­ளது.