கிறிஸ்மஸ் பேரணியில் கார் புகுந்து ஐவர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம், வாக்கிஷா நகரில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் பேரணியில் கார் புகுந்ததில் ஐவர் கொல்லப்பட்டனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


காரை ஓட்டியவர் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் ஓட்டிச் சென்ற வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாக்கிஷா நகரக் காவல்துறைத் தலைவர் டேன் தாம்ப்சன் தெரிவித்தார்.


“பேரணியில் சென்ற பலரையும் அவ்வாகனம் இடித்துச் சென்றது. அவர்களில் சிலர் குழந்தைகள். இச்சம்பவத்தில் ஒரு சில உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன,” என்றார் திரு தாம்ப்சன்.


ஆனாலும், குடும்பத்தினர்க்குத் தெரியப்படுத்துமுன் எத்தனை பேர் இறந்துவிட்டனர் என்பதைச் சொல்ல முடியாது என்று முதலில் அவர் சொன்னார்.


அத்துடன், இச்சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா எனத் தெரிவியவில்லை என்றும் அவர் கூறினார்.


இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.39 மணிக்கு நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.


பேரணியாகச் சென்றோர்மீது மோதியபோது அந்த வாகனம் கிட்டத்தட்ட 40 மைல் (64 கிலோமீட்டர்) வேகத்தில் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!