கடுமையாகும் கட்டுப்பாடுகளால் வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்

கடுமையாகும் கட்டுப்பாடுகளால் வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்

1 mins read
32135da0-e6b7-4097-af45-6bf6791fb801
ஊரடங்கு உத்தரவை மீறி பிரான்சின் குவாடலூப் தீவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது தீக்கிரையான கார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் 38 பேரை போலிசார் கைது செய்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

பிரசல்ஸ்: ஐரோப்­பிய நாடு­களில் பெரு­கி­வ­ரும் கிரு­மிப் பர­வல் கார­ண­மாக கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் கொண்டு வரப்­ப­டு­கின்­றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல நாடு­கள், நக­ரங்­களில் மக்­கள் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். ஒரு சில நக­ரங்­களில் அவை வன்­மு­றை­யா­க­வும் வெடித்­தன.

பெல்­ஜி­யத் தலை­ந­க­ரான பிரசல்­சில் நடந்த ஆர்ப்­பாட்­டத்­தில் சுமார் 35,000 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களில் சிலர் போலி­சார் மீது பொருட்­களை வீசி­னர். சிலர் போலிஸ் வாக­னங்­

க­ளுக்­குத் தீ வைத்­த­னர். எனவே அவர்­க­ளைக் கலைக்க போலி­சார், தண்­ணீர் பீயிச்சி அடித்­தும் கண்­ணீர் புகை குண்­டு­க­ளை­யும் பயன்­

ப­டுத்­தி­னர்.

நெதர்­லாந்­தின் பெரும்­பாலா நக­ரங்­களில் 3வது நாளாக தொட­ரும் ஆர்ப்­பாட்­டத்­தால் அங்கு கலகத் தடுப்பு போலி­சார் பணி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ள­னர்.

இதற்கிடையே, ஜெர்­ம­னி­யில் இது­வரை 68 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள நிலை­யில், தடுப்­பூசி போடு­வதைக் கட்­டா­ய­மாக்­கு­வது பற்றி அங்கு பரி­சீ­லிக்­கப்­ப­டு­கிறது.