சோஃபியா: பல்கேரியாவில் பயணிகள் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 12 பிள்ளைகள் உட்பட சுற்றுலாப் பயணிகள் 45 பேர் உடல் கருகிப் பலியாகினர். தீக்காயங்களுடன் தப்பிய 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துருக்கியில் இருந்து வடக்கு மேசடோனியா நோக்கி பல்கேரியா வழியாக சென்ற பேருந்து உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் தீப்பற்றி எரிந்தது. பேருந்தில் இருந்தவர்கள் துருக்கிக்குச் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியவர்களாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
மனிதத் தவறு காரணமாகவோ, பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்று பல்கேரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.