பணத்திற்காக குழந்தைகளுக்கு திருமணம் செய்யும் பெற்றோர்

1 mins read
7f7b9be8-50cd-4201-b4bc-89af48064f62
-

இஸ்­லா­மா­பாத்: ஆப்­கா­னிஸ்­தா­னில் பொரு­ளா­தா­ரம் மோச­ம­டைந்து வரும் நிலை­யில், அங்கு குழந்தைத் திரு­ம­ணம் அதி­க­ரித்து வரு­கிறது.

பசி, பட்­டி­னி­யால் வாடும் அந்­நாட்டு மக்­களில் பலர் பணத்­திற்­காக சிறு வயது பெண் குழந்­தை­

க­ளைத் திரு­ம­ணம் செய்து கொடுக்­கும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

செங்­கல் சூளை தொழி­லாளி ஒரு­வர் தனது 13 மற்­றும் 15 வயது மகள்­களை, அவர்­க­ளை­விட இரண்டு மடங்கு அதிக வய­து­டை­ய­வர்­க­ளுக்­குத் திரு­ம­ணம் செய்­து­கொ­டுத்­ததற்கு 3,000 அமெ­ரிக்க டாலர் வர­தட்­சணை கிடைத்­தது.

"எனக்கு வேறு எந்த வழி­யும் இல்லை. இந்த பண­மும் தீர்ந்­து­விட்­டால் என்­னு­டைய ‌ஏழு வயது மக­ளை­யும் திரு­ம­ணம் செய்து

கொடுக்க வேண்­டி­யி­ருக்­க­லாம்," என்­றார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி தலி­பான்­அமைப்பு, ஆப்­கா­னிஸ்­தா­னில் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­ய­தில் இருந்து நில­வும் வறு­மை­யின் கார­ண­மாக அங்கு குழந்தை திரு­ம­ணங்­கள் அதி­க­ரித்­துள்­ள­தாக பெண் உரிமை ஆர்­வ­லர்­கள் கூறு­கின்­ற­னர்.

வரும் மாதங்­களில் இவை இரட்­டிப்­பா­கக்­கூ­டும் என்­றும் அவர்­கள் எச்­ச­ரித்­த­னர்.

எதிர்­கா­லத்­தில் திரு­ம­ணம் செய்து­கொ­டுப்­ப­தற்­காக 20 நாட்­களே ஆன பெண் குழந்­தை­க­ளை­யும் பணம் பெற்­றுக்­கொண்டு கொடுப்­ப­தாக ஐநா குழந்­தை­கள் அமைப்பு கூறு­கிறது.

அடுத்த ஆண்டு மத்­தியில் ஆப்­கா­னில் 97 விழுக்­காட்டு குடும்­பங்­கள் வறு­மைக்­கோட்­டிற்­குக் கீழ் தள்­ளப்­படும் என்­றும் ஐநா கூறி­யது.

உட­ன­டி­யாக நிதி ஆத­ரவு வழங்­கப்­ப­ட­வில்லை என்­றால், மில்­லி­யன் கணக்­கா­னோர் இறந்­து­போ­கக்­

கூ­டும் என்று ஐநா எச்­ச­ரித்­து

உள்­ளது.