வழிப்பறி: பொய் தகவலுக்கு ஜோகூர் மறுப்பு

ஜோகூர் பாரு: மலே­சியா-சிங்­கப்­பூர் நில­வழிப் பய­ணம் மீண்டும் தொடங்­கும்­போது சிங்­கப்­பூ­ரர்­கள் வழிப்­பறி திருட்டை எதிர்­கொள்ள நேரி­டும் என்று சமூக வலைத்­த­ளங்­களில் பர­வும் தக­வ­லுக்கு ஜோகூர் மாநில போலி­சார் மறுப்பு தெரி­வித்­துள்­ள

­னர்.

இந்த விஷ­யத்­தில் பொய் தக­வல்­கள், வதந்­தி­கள் அல்­லது உறு­தி­செய்யப்ப­டாத செய்­தி­க­ளைப் பரப்­பு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜோகூர் மாநில போலிஸ் தலை­வர் அயோப் கான் மைடின் பிச்சை தெரி­வித்­தார்.

சமூக ஊட­கங்­களில் பர­வும் பொய் தக­வல்­க­ளைப் பொது­மக்­கள் யாரும் நம்­ப­வேண்­டாம் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

ஜோகூர் மாநி­லத்­தில் குற்­றச் செயல்கள் 39.67 விழுக்­காடு குறைந்து, நிலைமை கட்­டுக்­குள் இருப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

அதே­போல் திருட்டு சம்­ப­வங்­கள் 77.64 விழுக்­கா­டும் வாக­னத் திருட்டு சம்­ப­வங்­கள் 51.05 விழுக்­கா­டும் குறைந்­துள்­ள­தாக போலிஸ் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டது.

எல்லை மீண்­டும் திறக்­கப்­படும் போது நூற்­றுக்­க­ணக்­கான திரு­டர்­கள், சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வரும் சுற்­று­லாப் பய­ணி­க­ளிடம் கைவரிசை காட்ட காத்­தி­ருப்­ப­தாகவும் சமூக ஊட­கங்­களில் வலம் வரும் தகவல் கூறு­கிறது.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான நில­வழி 'விடி­எல்' எனும் தடுப்­பூசி பய­ணத்­தட திட்­டம் வரும் 29ஆம் தேதி தொடங்­க­வுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!