வழிப்பறி: பொய் தகவலுக்கு ஜோகூர் மறுப்பு

வழிப்பறி: பொய் தகவலுக்கு ஜோகூர் மறுப்பு

1 mins read
c96919c2-7bce-484f-94d2-572558d52e89
-

ஜோகூர் பாரு: மலே­சியா-சிங்­கப்­பூர் நில­வழிப் பய­ணம் மீண்டும் தொடங்­கும்­போது சிங்­கப்­பூ­ரர்­கள் வழிப்­பறி திருட்டை எதிர்­கொள்ள நேரி­டும் என்று சமூக வலைத்­த­ளங்­களில் பர­வும் தக­வ­லுக்கு ஜோகூர் மாநில போலி­சார் மறுப்பு தெரி­வித்­துள்­ள

­னர்.

இந்த விஷ­யத்­தில் பொய் தக­வல்­கள், வதந்­தி­கள் அல்­லது உறு­தி­செய்யப்ப­டாத செய்­தி­க­ளைப் பரப்­பு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜோகூர் மாநில போலிஸ் தலை­வர் அயோப் கான் மைடின் பிச்சை தெரி­வித்­தார்.

சமூக ஊட­கங்­களில் பர­வும் பொய் தக­வல்­க­ளைப் பொது­மக்­கள் யாரும் நம்­ப­வேண்­டாம் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

ஜோகூர் மாநி­லத்­தில் குற்­றச் செயல்கள் 39.67 விழுக்­காடு குறைந்து, நிலைமை கட்­டுக்­குள் இருப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

அதே­போல் திருட்டு சம்­ப­வங்­கள் 77.64 விழுக்­கா­டும் வாக­னத் திருட்டு சம்­ப­வங்­கள் 51.05 விழுக்­கா­டும் குறைந்­துள்­ள­தாக போலிஸ் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டது.

எல்லை மீண்­டும் திறக்­கப்­படும் போது நூற்­றுக்­க­ணக்­கான திரு­டர்­கள், சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வரும் சுற்­று­லாப் பய­ணி­க­ளிடம் கைவரிசை காட்ட காத்­தி­ருப்­ப­தாகவும் சமூக ஊட­கங்­களில் வலம் வரும் தகவல் கூறு­கிறது.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான நில­வழி 'விடி­எல்' எனும் தடுப்­பூசி பய­ணத்­தட திட்­டம் வரும் 29ஆம் தேதி தொடங்­க­வுள்­ளது.