கிடுகிடுவென உயரும் தொற்று; தடுப்பூசி போட வலியுறுத்து

கிடுகிடுவென உயரும் தொற்று; தடுப்பூசி போட வலியுறுத்து

2 mins read
37531cd1-2241-49a1-8f3b-ff345c3f86d5
-

பெர்­லின்: கொரோனா கிரு­மித்­தொற்று மறு­ப­டி­யும் ஐரோப்­பா­வில் தலை­வி­ரித்­தா­டத் தொடங்­கி­யுள்­ளது. குளிர் காலம் கிரு­மிப் பர­வலை அதி­க­மாக்­கி­யுள்­ள­தால், ஐரோப்­பா­வின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன.

ஐரோப்­பிய நாடு­கள் கொவிட்-19 கட்­டுப்­பாட்­டு­களை மீண்­டும் விதித்து வரு­வ­து­டன் தடுப்­பூ­சி­யை­யும் வலி­யு­றுத்­து­கின்­றன.

மேற்கு ஐரோப்­பா­வில் ஏறக்­கு­றைய 60% மக்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுள்­ள­னர்.

ஆனால் கிழக்கு ஐரோப்­பா­வில் பாதிப் பேர் மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். பூஸ்­டர் ஊசி போடு­வது, மின்­னி­லக்க தடுப்­பூசி அட்­டை­யின் தாக்­கம் போன்­றவை குறித்து ஐரோப்­பிய ஒன்­றிய அமைச்­சர்­கள் கூடிப் பேசி­யுள்­ள­னர்.

ஜெர்­ம­னி­யில் கொவிட்-19 மர ணங்­கள் 100,000ஐ தாண்­டி­விட்­டன. பிரிட்­டன், இத்­தாலி, பிரான்ஸ் முத­லிய நாடு­களை அடுத்து 100,000க்கும் அதி­க­மா­னோ­ரைக் கிரு­மிக்­குப் பலி­கொ­டுத்­தி­ருக்­கும் ஐந்­தா­வது நாடு இது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோ­ருக்­குக் கட்­டுப்­பா­டு­கள் கடுமை யாகும் என்று அதி­பர் ஏஞ்­சலா மெர்க்­கல் கூறி­யுள்­ளார்.

பிரான்­சில் அன்­றா­டம் 30,000க்கும் அதி­க­மான புதிய சம்­ப­வங்­கள் பதி­வா­கின்­றன. பள்­ளி­கள் மூடப்­ப­ட­லாம் என ஏற்­கெ­னவே கோடி­காட்­டப்­பட்­டுள்­ளது.

அண்­மைய புள்­ளி­வி­வ­ரங்­க­ளின்­படி, பிரான்­சின் 67.4 மில்­லி­யன் மக்­களில் 76.8% பேர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி பெற்­றுள்­ள­னர்.

"கடு­மை­யான நோய்ப் பாதிப்­பும் உயி­ரி­ழப்­பும் தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளை­விட, போடா­த­வர்­க­ளி­டையே ஒன்­பது மடங்கு அதி­கம்," என்று அர­சாங்க செய்­தித் தொடர்­பா­ளர் கேப்­ரி­யல் அட்­டல் கூறி­னார்.

வரும் மார்ச் 1ஆம் தேதிக்­குள் ஐரோப்பா, மத்­திய ஆசியா பகு­தி­களில் மேலும் 700,000 கொவிட்-19 மர­ணங்­கள் ஏற்­ப­ட­லாம் என்று உலக சுகா­தார அமைப்பு எச்­ச­ரித்­துள்­ளது.

கடந்த வாரம் கொவிட்-19 மர­ணங்­கள் நாளொன்­றுக்கு கிட்­டத்­தட்ட 4,200 ஆக உயர்ந்­துள்­ளது. இது செப்­டம்­பர் மாத இறு­தி­யில் பதிவு செய்­யப்­பட்ட மரண எண்­ணிக்­கை­யை­விட இரு மடங்கு அதி­க­மா­கும்.

'தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டா­லும் முன்­னெச்­ச­ரிக்கை வேண்­டும்'

இதற்­கி­டையே, கொவிட்-19 கிரு­மித்­தொற்று தடுப்­பூ­சி­கள் டெல்டா வகை தொற்று பர­வு­வ­தைக் கிட்­டத்­தட்ட 40 விழுக்­காடு தடுக்­கும் என்ற உல­கச் சுகா­தார நிறு­வ­னம் மக்­கள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளைப் பின்­பற்ற வேண்­டும் என்று எச்­ச­ரித்­துள்­ளது.

"தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட

வராக இருந்­தால், கடு­மை­யா­கப் நோய்­வாய்­ப­டு­வ­தற்­கும் உயி­ரி­ழப் பதற்­கு­மான அபா­யம் குறை­வாக இருக்­கும். இருப்­பி­னும் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வ­தற்­கும் அதை மற்­ற­வர்­க­ளுக்­குப் பரப்­பு­வ­தற்­கு­மான அபா­யம் உள்­ளது," என்­றார் நிறு­வ­னத்­தின் தலைமை இயக்­கு­நர் டெட்­ரோஸ் அதா­னோம்.

எனவே தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருந்­தா­லும் முகக்­க­வ­சம் அணி­வது, சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்­று­வது, கூட்­ட­மான இடங்­

க­ளைத் தவிர்ப்­பது போன்­ற­வற்­றைத் தொடர்ந்து பின்­பற்­ற­வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.