புத்ரஜெயா: மலேசியாவில் இப்போதைக்குப் பொதுத் தேர்தலை நடத்துவது பொறுப்பற்ற செயலாக அமைந்துவிடும் என்று கூறியுள்ளார் மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன்.
மலேசியாவின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 2023ஆம் ஆண்டு வரை உள்ளது என்றாலும் திடீர் தேர்தல் வரக்கூடும் என்று பலரும் ஊகிக்கின்ற
னர்.
இந்நிலையில் பேசிய கைரி, "கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது, புதிய உருமாறிய கிருமி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால் தற்போது பொதுத் தேர்தலை நடத்துவது சரியாக இருக்காது.
"பொதுத் தேர்தல் தவிர்க்கப் படக்கூடிய ஒன்று. இது சரவாக், மலாக்கா சட்டமன்றத் தேர்தலைப் போன்றது அல்ல.
"இப்போதைக்கு பொதுத் தேர்தலை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு கண்டிப்பாக அறிவுறுத்தாது," என்றார் அவர்.
மலாக்காவைத் தொடர்ந்து சரவாக்கில் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்
தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 6ஆம் தேதி நடைபெறும்.
தொடக்கப்பள்ளி மாணவர்கள் அடுத்த வாரம் முதல் வாராந்திர கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.
ஒவ்வொரு பள்ளியிலும் 10 விழுக்காட்டு மாணவர்களிடம் சுழற்சி அடிப்படையில் வாராவாரம் கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மலேசியா-சிங்கப்பூருக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்காக வரும் 29ஆம் தேதி முதல் ஜோகூர் கடற்பாலம் 18 மணி நேரம் செயல்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் வீ க சியோங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய அவர் இனி காலை 7 மணி முதல் பின்னிரவு 1 மணி வரை ஜோகூர் கடற்பாலம் செயல்படும் என்று சொன்னார்.
இது நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதுடன் வர்த்தகர்களின் சிரமங்களையும் குறைக்கும் என்று அவர் சொன்னார்.