செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4391b04f-a980-4c57-9be3-a5cbb5892dd0
-

ர‌ஷ்ய நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு

மாஸ்கோ: ரஷ்­யா­வில் நிலக்­க­ரிச் சுரங்­கத்­தில் ஏற்­பட்ட

தீ விபத்­தில் உயி­ரி­ழந்­தோ­ரின் எண்­ணிக்கை 52ஆக

அதி­க­ரித்தது.

ர‌ஷ்­யா­வின் சைபீ­ரியா பகு­தி­யில் லிஸ்ட்­வேஸ்­னியா பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்­கம் ஒன்றில் காற்றோட்டத்துக்­காக அமைக்கப்பட்டு இருந்த குழி­யின் முகப்பு பகு­தி­யில் படிந்­தி­ருந்த நிலக்கரி தூணில் திடீ­ரென பிடித்த தீ சுரங்­கத்­துக்­குள் பர­வி­யது.

அப்போது அங்கு பணியில் இருந்த பல தொழி­லா­ளர்­கள் தீயில் கருகி உயி­ரி­ழந்­த­னர். படுகாயம் அடைந்த 49 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பல­ரு­டைய நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்து தொடர்பாக சுரங்க நிறு­வன அதி­கா­ரி­கள் 4 பேர் கைது செய்யப்­பட்­டுள்­ள­னர்.

வெளிநாட்டுப் பயணிகளுக்கு பிலிப்பீன்ஸ் அனுமதி

மணிலா: தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் அனுமதிக்க பிலிப்பீன்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அடுத்த மாதத்தின் முதல் 15 நாட்களில் தொற்று அபாயம் குறைவாக உள்ள நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிபரின் செய்தித் தொடர்பாளர் கார்லோ சொன்னார்.

பிரிட்டன், இந்தியா, இந்தோனீசியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் தொற்று அபாயம் குறைவாக உள்ளதாக பிலிப்பீன்ஸ் வகைப்படுத்தியுள்ளது.

‌‌ஷங்காயில் மீண்டும் தொற்று

‌‌ஷங்­காய்: கிரு­மித்­தொற்றை முற்­றி­லும் துடைத்­தொ­ழிப்­பதை நோக்­க­மா­கக் கொண்­டுள்ள சீனா­வின் ‌ஷங்­காய் நக­ரத்­தில் மீண்­டும் கட்­டுப்­பா­டு­கள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன.

அங்கு மூன்று பேருக்கு உள்­ளூர் கிரு­மித்தொற்று அடையா­ளம் காணப்­பட்­ட­தைத் தொடர்ந்து சுற்­றுலா நடவடிக்கை­க­ளும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அத்­து­டன் அங்கு பொது போக்­கு­வ­ரத்து சேவை­களும் குறைக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் சுற்றுலா நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவும் பயண முகமைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று பள்ளிகள் மூடப்பட்டன. மக்கள் தேவையின்றி நகரத்தைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்மைய கிருமிப் பரவலை சீனா சில நாட்­க­ளுக்கு முன்பு கட்­டுக்­குள் கொண்டு வந்த நிலையில், அங்கு மீண்டும் கிருமித்தொற்று தலைதூக்கியுள்ளது.