அமெரிக்காவின் மினசோட்டாவில் பதின்ம வயதினர் ஒருவர் ஐந்து வயது பிள்ளையைத் தெரியாமல் சுட்டுக்கொன்றதாக போலிசார் தெரிவித்துள்ளனர். ‘தேங்க்ஸ்கிவங்’ கொண்டாட்ட தினமான கடந்த வியாழக்கிழமை அன்று துப்பாக்கிச்சூடு நேர்ந்தது.
பதின்ம வயதினர் சிலர் காணொளி ஒன்றைத் தயாரித்துக்கொண்டிருந்தபோது மாண்ட சிறுவன் அங்கு இருந்ததாக போலிசார் தெரிவித்தனர். சிறுவனைத் தவறுதலாக அந்த 13 வயது இளையர் சுட்டதாக அந்த இளையரைக் கைதுசெய்த காவல்துறையினர் தெரிவித்தனர்.