சிட்னி: திறன் அடிப்படையில் நியமிக்கப்படும் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் எல்லையைத் திறந்துவிட எடுக்கப்பட்ட முடிவை ஆஸ்திரேலியா நேற்று கடைசி நேரத்தில் மீட்டுக்கொண்டது.
ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகை குறித்து அச்சம் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அவசரநிலை பாதுகாப்பு கூட்டத்துக்குப் பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிசம்பர் 1ஆம் தேதி எல்லைத் திறப்பு, குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்தார். வெளிநாட்டுப் பயணி
களுக்கு கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியா
பயணத் தடை விதித்துள்ளது.
இதனால் ஆஸ்திரேலியாவில் ஊழியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாது, சுற்றுப்பயணத் துறையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை ஐந்து பேருக்கு ஓமிக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி எல்லைத் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோரிசன் தெரிவித்தார்.
ஓமிக்ரான் பற்றி கூடுதல் தகவல் திரட்ட இந்தக் கால
அவகாசம் அவசியம் என்றார் அவர்.
ஓமிக்ரானால் உலகளாவிய
அபாயநிலை
ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகையால் உலகளாவிய நிலையில் ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் அதை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாடுகளில் மிக மோசமான விளைவு களை அது ஏற்படுத்தக்கூடும் என்று அது கூறியது.