மூன்று நாட்களில் ஒன்பது மில்லியன் பேருக்குத் தடுப்பூசி

மூன்று நாட்களில் ஒன்பது மில்லியன் பேருக்குத் தடுப்பூசி

1 mins read
caa7ab22-b2d1-4dda-92cf-22cba0f2b327
-

மணிலா: கொவிட்-19க்கு எதி­ராக எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­க­ளின் ஒரு பகு­தி­யாக அடுத்த மூன்று நாட்­களில் ஒன்­பது மில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி போட பிலிப்­பீன்ஸ் இலக்கு கொண்­டுள்­ளது.

இந்த மாபெ­ரும் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த ஆயி­ரக்­க­ணக்­கான தொண்­டூ­ழி­யர்­களை அது பயன்­ப­டுத்­து­கிறது. அது­மட்­டு­மல்­லாது, தடுப்­பூசி போடும் இடங்­களில் பாது­காப்­புப் படை அதி­கா­ரி­கள் பணி­யில் ஈடு­ப­டு­வர்.

முத­லில் 15 மில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி போட வேண்­டும் எனத் திட்­ட­மி­டப்­பட்­டது.

ஆனால் பிறகு அது 9 மில்­லி­ய­னுக்­குக் குறைக்­கப்­பட்­டது. பிலிப்­பீன்­ஸில் பலர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளத் தயங்­கும் நிலை­யில், இந்த இலக்கை எட்டி சாதனை படைக்க பிலிப்­பீன்ஸ் அர­சாங்­கம் விழை­கிறது.

கடந்த ஆண்டு நவம்­பர் மாதத்­தில் நாள்­தோ­றும் சரா­ச­ரி­யாக 829,000 பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டது.

எனவே அடுத்த மூன்று நாட்­களில் நாள் ஒன்றுக்கு மூன்று மில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டால் அது கிட்­டத்­தட்ட நான்கு மடங்கு அதி­க­மா­கும்.

ஓமிக்­ரான் கிருமி வகை குறித்து தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ள­தால் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­பது மேலும் முக்­கி­யத்துவம் பெற்று விட்டதாக பிலிப்­பீன்ஸ் சுகா­தா­ரத் துறை தெரி­வித்­தது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட

சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்­குத்

தற்­கா­லி­கத் தடை

உரு­மா­றிய கொவிட்-19 கிருமி வகை­யான ஓமிக்­ரான் பிலிப்­பீன்­ஸில் பாதிப்பை ஏற்­ப­டா­தி­ருக்க அந்­நாடு கட்­டுப்­பா­டு­க­ளைக் கடுமையாக்கியுள்ளது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சுற்­றுப்­ப­ய­ணி­களை அனு­மதிக்க முத­லில் எடுக்­கப்­பட்ட முடிவை அது தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைத்­துள்­ளது.