கொழும்பு: இலங்கை உள்நாட்டுப் போரில் மாண்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடந்த சனிக்கிழமையன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நினைவஞ்சலி 2009ஆம் ஆண்டில் நடந்த இறுதிப் போர் நடைபெற்ற முல்லைத்தீவில் அனுசரிக்கப்பட்டது.
அஞ்சலி செலுத்தும் இடத்துக்கு வந்த இலங்கை ராணுவத்தினர் அங்கிருந்த செய்தியாளர்களை அடித்துக் காயப்படுத்தியதாக ஊடகங்கள் தெரிவித்தன.
மாண்ட தங்கள் அன்புக்
குரியவர்களின் கல்லறைகளில் விளக்கேற்ற சென்றிருந்த உறவினர்களையும் ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் காவல்துறையிடம் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்துவதாக காவல்துறை கூறியது.
தனிநாடு கோரி போர் புரிந்த தமிழீழ விடுதைப் புலிகள் 1980களின் பிற்பகுதியிலிருந்து கடைசி போர் வரை ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதியன்று மாண்ட போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 'மாவீரர் தினத்தை' அனுசரித்தது.
ஆனால் 2019ஆம் ஆண்டில் திரு கோத்தபாய ராஜபக்சே அதிபரானதும் போரில் மடிந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்குத் தடை விதித்தார்.
போரின்போது குறைந்தது 40,000 தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றதாக ஐநா குற்றம் சுமத்தியது. இந்தக் குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது.

