நியூடெல்லி: சீனாவைத் தொடர்ந்து ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தடுப்பூசி அனுப்புவதாக இந்தியாவும் கூறியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவும் சீனாவும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன. அங்கு அதிக முதலீடு செய்துள்ள சீனா, மேலும் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்வதாக திங்களன்று உறுதி அளித்தது.
ஓமிக்ரானை எதிர்த்துப் போராடும் வகையில் ஆப்பிரிக்க நாடு களுக்கு ஒரு பில்லியன் தடுப்பூசி களை அனுப்புவதாக சீனா நேற்று முன்தினம் கூறியது. அத்துடன் 1500 மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை அனுப்புவதாகவும் அது கூறியது.
ஏற்கெனவே 600 மில்லியன் தடுப்பூசிகளை ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா அனுப்பியுள்ளது.
இந்நிலையில், ஆப்பிரிக்காவிற்கு விரைவாக தடுப்பூசிகளை அனுப்ப தயாராக உள்ளதாக இந்தியாவும் நேற்று சொன்னது.
"தடுப்பூசி வழங்குவது உள்ளிட்ட ஓமிக்ரான் உருமாறிய தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவ இந்திய அரசாங்கம் தயாராக உள்ளது.
"அது 'கோவேக்ஸ்' தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் கீழோ அல்லது இருதரப்பு உறவின் அடிப்படையிலோ இருக்கும்," என்றது இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கை.
தடுப்பூசி பகிர்வு திட்டத்தின்கீழ், 41 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 25 மில்லியனுக்கும் மேற்பட்ட உள்ளூர் தயாரிப்பு தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக இந்தியா கூறியது.
இந்தியாவில் தடுப்பூசி ஏற்று
மதிக்கான தடை சென்ற ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அங்கு தடுப்பூசி உற்பத்தி மும்மடங்கு அதிகரித்து மாதத்திற்கு 300 மில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.

