கோலாலம்பூர்: கொவிட்-19 கிருமிப் பரவலை நிரந்தர நோயாக கையாளும் மலேசியாவின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுதின் ஹுசைன் கூறினார்.
புதிய ஓமிக்ரான் கிருமித்தொற்றை பற்றி அரசாங்கம் நிறைய தெரிந்துகொள்ள வேண்டியிருப் பதால், நேற்று நடைபெற்ற அமைச்சு நிலை சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
"நிரந்தர நோயாக கையாளும் முயற்சியை ஒத்திவைக்கவில்லை. தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். ஏனெனில் புதிய உருமாறிய ஓமிக்ரான் தொற்றைக் கண்காணித்து, அதைப் பற்றி முற்றிலுமாக தெரிந்துகொள்ளவில்லை என்றால் நிரந்தர நோயாக கையாளும் முயற்சிகளுக்குப் பலனிருக்காது.
"பரிசோதனைகளின் மூலம் ஓமிக்ரான் தொற்றை அடையாளம் காணமுடியும் என்றாலும் அது வேகமாகவும் எளிதாகவும் பரவக்கூடியது," என்றார் அவர்.
ஓமிக்ரான் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நாடு
களுக்கான எல்லைக் கட்டுப்
பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

