ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு ஹாங்காங் தடை

ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு ஹாங்காங் தடை

1 mins read
2eeaa097-90a0-4458-a4f6-9d28903a9efd
-

ஹாங்­காங்: நான்கு ஆப்­பி­ரிக்க நாடு­களில் இருந்து செல்­லும் வெளி­நாட்­டி­ன­ருக்கு ஹாங்­காங் தடை விதித்­துள்­ளது.

ஓமிக்­ரான் உரு­மா­றி­ய தொற்று கார­ண­மாக கிரு­மிப் பர­வல் அதி­க­ரிக்­கும் பேரா­பத்து உள்­ள­தாக உல­கச் சுகா­தார நிறு­வ­னம் திங்­கட்

­கி­ழமை கூறி­யது.

இந்­நி­லை­யில் அங்­கோலா, எத்­தி­யோப்­பியா, நைஜீ­ரியா, ஸாம்­பியா ஆகிய ஆப்­பி­ரிக்க நாடு­க­ளைச் சேர்ந்த வெளி­நாட்­டி­னர் நேற்று முதல் ஹாங்­காங்­கிற்­குள் நுழைய அந்­நாடு தடை விதித்­துள்­ளது.

அந்­நா­டு­களில் இருக்­கும் ஹாங்­காங் குடி­யி­ருப்­பா­ளர்­கள், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளாக இருப்­பின் நாடு திரும்­ப­லாம். ஆனால் அர­சாங்க இடத்­தில் ஏழு நாள்­களும் சொந்த செல­வில் விடு­தி­யில் இரண்டு வார கால­மும் தனி­மைப்­

ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்.

அத்­து­டன், முந்­திய 21 நாட்­களில் ஆஸ்­தி­ரே­லியா, ஆஸ்­தி­ரியா, பெல்­ஜி­யம், கனடா, செக் குடி­ய­ரசு, டென்­மார்க், ஜெர்­மனி, இஸ்­ரேல், இத்­தாலி ஆகிய நாடு­க­ளுக்­குச் சென்ற வெளி­நாட்­டி­ன­ர் டிசம்­பர் 2ஆம் தேதி முதல் ஹாங்­காங்­கிற்­குள் நுழைய அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள்.